எல்லாமே அலாதியான வயதிலே,
விளையாட்டாய் சாமியான கல், பூ மஞ்சள்
மற்றும் குங்குமக் கூடுகை.-
♥️எல்லாவற்றையும் அழகாக்கக் கூடியது 💚
💔அதாலே பிரிவினில் வாடினும் வாழ் 💙
❤️🔥மீ... read more
திறக்காத கதவின் தாழ்வாரத்தில்
சலிக்காமல் அமர்ந்து கனவு
காண்கிறேன்.
தானாய் உடையும் கதவையும்
கடந்து ஒற்றை புன்னகை தரிசனமும்
பெற்று மீண்டும் தவறாது
வாடிக்கையாய் நாளும் வந்து
போகிறேன்.
அந்த ஒற்றை புன்னகைக்கு தான்
நீளும் இத்தனை மெனக்கெடல்கள்...-
எதற்குமே தயாரில்லை,
எல்லாம் எடுத்தவுடனே நடக்கனும்.
அப்படி தான் நடக்குது.
ஆனால் என்ன எல்லாம்
எனக்கெதிராக அதிவிமரிசையாக
கொண்டாட்டமாக...-
பொழியாத கந்தரமாய் எங்கும்
கணக்கிறாய்.
எந்த வழியும் இல்லை தான்.
இருந்தும் எப்படியும் துளி அன்பேனும்
ததுபிடக்கூடும் எனும் உள்ளுணர்வு
தான் பாடாய் படுத்துது.
ஒவ்வொரு நொடியும் புதுப்புது
கடிதம் எழுதி மனமே மனதை
படுத்திகொள்ளுது...-
அலையடித்துக்
கொண்டிருக்கும் வண்ணங்களை
வளைத்து வட்டமிடவைத்து
கரைசேர்த்தனுப்புகிறது இந்த
குமிழ்கள்...-
இனி எந்த வழியுமே இல்லை.
பேரிருளுக்குள் வெளிச்சம்
தேடி அலைந்து திரிய
வேண்டியது தான். எந்த
வெளிச்சத்திற்கும் வாய்ப்பே
இல்லை தான்.
ஆனாலும் வெளிச்சம் தேடி
அலையும் இந்த தேடலை
வழிமறிக்கும் திடம் என்னில்
இல்லையே. என்னை இனி
என்ன செய்ய...?-
எல்லா கவலைகளையும்
பிரச்சினையையும் நாம தான்
விலை கொடுத்து வாங்கி வச்சிட்டு,
மகிழ்வை ஓரவஞ்சனையோடு
அனுபவிக்கிறோம்.-
நாடகமேடையில் எது உண்மை எது பொய். அது எதுவானாலும் சரி அது "நாடகம்" அவ்வளவு தானே.
-