யானைப்பசிக்கு சோளப்பொறியைப்
போலத்தான் இந்த கவிதைகள்...
ஒன்று கூட முழுதாய் என் மனதை
நிறைப்பதேயில்லை...
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்
வேறு கோணத்தில் சிந்தித்திருக்கலாம்
அப்படி இருந்திருக்கலாம்
இப்படி எழுதியிருக்கலாமென்றே
நீள்கிறது...
என்றாவது ஒரு நாள் என் மனதை
முழுதாய் நிறைக்கும் படி ஒரு
கவிதையை எழுதி விட வேண்டும்...
அதற்கு பிறகு எழுதுவதை விட்டு
விட வேண்டும்...!
-