நிறைந்திருக்கிறது
நேசமும்
பயமும்
திறந்து பாரக்கையில்
கொஞ்சம் திருத்தியமைக்கிறேன்
வரிகளின் மத்தியில்
மாட்டிக்கொள்கிறது மனம்.-
Nirvi
(நிர்வி)
376 Followers · 273 Following
Joined 9 February 2019
12 MAR 2021 AT 8:27
10 MAR 2021 AT 22:43
சொற்களுக்கோ பஞ்சமில்லை
கற்பனைக்கோ எல்லையில்லை
ஆரம்பமோ முடிவோ இல்லாமல்
விட்ட இடத்தில் தொடங்கி
முற்றுப்பெறாமலே விடப்பட்டது
அந்தக் கவிதை-
19 FEB 2021 AT 19:07
கரையும் நிலவுக்கு
குறையேதுமில்லை
ஒளியைத் தவிர
அதே இரவு
அதே வானம்
அதே குளிர்
அதே இதம்-
19 FEB 2021 AT 12:07
ஒவ்வொரு
சந்திப்பிலும்
தித்திக்கும்
பார்வையுடன்
சுவையூட்டியாக
நின் முத்தம்
கடைசிமிடறு வரை-
16 FEB 2021 AT 17:57
அண்டத்தைப் பழிக்காதே நேசா
அகம் தானே திசை - அதில்
கூத்தாட்டுக் கோவன் தனை தொழுதால்
கூடிடுமே நாளு மது
-
10 DEC 2020 AT 8:32
நெஞ்சக்கிடக்கையில்
புடைக்கும் நரம்புகளில்
பரவித்திரியும் ஆராவென
ஒளிந்து கொண்டாய்
சுழலும் பூமியில்
விரியும் வானமாய்
எனக்குள் நீ..!-