நம் அன்புக்குரியவர்கள் ..
நம்மை வெறுத்து ..
பிறரை நேசிக்கும் போது ..
பொறுத்துக்கொள்ளுங்கள் ...
கானல் நீரெல்லாம் ..
கரைந்து போன பின் ..
அன்பெனும் தாகத்தில் ..
அனாதையாய் அவர்கள் ..
திரியும்போது ..
அரவணைக்க நாம் வேண்டும் ..-
அவனின் உண்மையான ..
அன்பை பெற ..
நான் இன்னொருவரின் ..
அன்புக்கு உரிய ஆளாக ..
மாறினேன் ...
அவர்தான் ..
என் அன்பு அத்தை ...-
ஓட்டை விழுந்த
குடிசைக்குள்
நுழைந்திடும்
சூரியனைப் போலவே
அவளால் அதிகமாக
ரசிக்கப்படுகிறேன்!-
எத்தனை முரண்பாடான
கருத்துகள் கொண்டு
இருந்தாலும் கூட,
அன்பானவர்களின் மனதை
புரிந்து கொள்வதே என்றும்
உண்மையான அன்பிற்கான
அடையாளமாகக் கொள்வதே..
காயங்களுக்கு மருந்தாகாமல்
வலி நிவாரணியாய் அன்றி
வடுவாய் நிலைக்கவே
எல்லாம் மனங்களும்
விரும்புகின்றன...-
முழுதாய் நேசித்த
பின் நெருடுவதில்லை..
அவர்களின் எந்த குறைகளும்.-
இருவிழிகளில் வழியும்
அந்தக் கண்ணீரே சாட்சி
உண்மையான அன்பிற்கும்
மேன்மையான பண்பிற்கும்
மென்மையான மாண்பிற்கும்-
யாரோ ஒருவன் என தொடங்கி நானே அவன் என்ற அளவிற்கு நம்முல் ஒன்றாக கலக்க கூடியவனே உண்மையான நண்பன்.
-
உன்னை அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற நினைப்பு
பிடிவாதம் அல்ல...
உண்மையான அன்பு 🌹💕-
எந்தஒரு அவசரகதியிலும் நலனறிய மறக்கமாட்டாள் அன்னை....
எத்தகைய பேரிடரிலும் முகம்காணாது முழுமையடையாது தந்தையின் ஒருநாள்...
சண்டைதான் பொழுதுக்கும் என்றாலும் என்தேவையின் சாத்தியங்களெல்லாம் அக்காவாலே...
இரத்த சொந்தமென்பதாலா..?
இல்லை!!
நானே விலகுவேன் நானே விரும்புவேன் நான் பிடித்த முயலது மூன்றுகாலுடையதென்பேன்...
முழுமனதோடில்லையென்றாலும்
முரண்படாமல் தலையாட்டுவாள்
முகம்வாடாமல் பார்த்துக்கொள்வாள்
முகவறியறியாமல் முகம்மட்டுமே அறிந்த தோழி.!
ஆம் அன்பிருந்தால்
அனைத்தும் சாத்தியம்..!
நேரங்களோ தேவைகளோ வேலைகளோ தீர்மானிப்பதில்லை
நேசம்தான் தீர்மானிக்கும்
உனக்கும் எனக்குமான இடைவெளியை..!-