ஓடுகாலி....
-
குழந்தை வரையும்
படங்களில் மட்டும்
சேர்ந்தே இருக்கின்றனர்
பெற்றோர் !!?!!
-
கற்பழிப்பு செய்திகள் பார்க்கும் பெற்றோர்கள்
வீட்டிலிருக்கும் தன் வயதுக்கு வந்த
பெண்ணை பார்த்தே நொந்துக் கொண்டு..
"காலங்கெட்டு போய் கெடக்குங்க..
காலகாலத்துல நம்ம புள்ளையையும்
ஒரு நல்ல கையில புடிச்சுக் கொடுக்கோனும்ங்க.. நாளப்பின்ன நம்ம புள்ள கண்ண கசக்கிட்டு
வந்து நின்னா என்னாகுறது.. நெனச்சு பாத்தாலே கதி கலங்குதுங்க" என கொதிக்கும் தாய் மனசு..
பெண் பிள்ளைகளை கொஞ்ச நாள் அதுப்போக்குலவிட்டு பின் கண்ணழகு பாக்கலாம்னு நினைக்கும் தந்தைக் கூட தடம் மாறி கல்யாணத்தையே நியாயமென நினைத்து அரைமனதாய் சம்மதம் சொல்வார்..
- இளங்கவி ஷாலினி கணேசன்-
பெற்றவர்களை என்றைக்கும்
முட்டாளாக எண்ணாதே
அவர்கள் இல்லாவிடில்
பிறர் போற்றும் வகையில்
புத்திசாலியாக இருக்க கூட முடியாது-
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவ்வலை
அம் மரத்தை தொட்டுச் சென்றது.
காத்திருந்து வறண்டு போன அம் மரமோ என்றும் போல் இல்லாமல் அன்று தன் கிளைகளை அசைத்து அளவில்லாத தன் சந்தோஷத்தை வெளிக்காட்டிக் கொண்டது, பின் தன்னிடம் இருந்த ஒற்றை இலையையும் பரிசாகத் தந்தது அவ் வலையிடமே!-
திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டாலும் சரி!
நரகத்தில் உமை தள்ளி
விட்டாலும் சரி!
குழந்தைகளின் முன்
சண்டையிடாதீர்கள்
பெற்றோர்களே...
ஆறாத வடுக்களை
பிள்ளைகள் மனதில்
விதைத்து விடாதீர்கள்!-
பெற்ற பிள்ளைகளின் கேவலமான பேச்சுக்களை
கேட்டு கொண்டு வாழும் பெரியவர்களே
அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டாம்
இவ் உலகில் எத்துணையோ ஆசிரமங்கள்
அங்கே அன்பு உள்ளங்களுடன் வாழும் நாட்களை கழித்திடுங்கள்
நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் வயதாகும்
அன்று அவர்கள் தங்கள் தவறை உணர்ந்திடுவர் !!-
இருப்பதானால் என்ன
அறுபதானால் என்ன
பெண் என்றுமே
அடிமை தான்...
👇👇👇👇👇-
நம் பண்பாடு படி
நடந்தால் பட்டிக்காடு
என்றும்,
மேலை நாட்டு உடையும்
நடையும் தான் நாகரிகம்
என்றும்,
பிள்ளைகளுக்கு
வழிகாட்டுவதில் பெற்றோர்
பங்கு கூடிவிட்டது
என்றே கூறுகிறேன் நான்...-