பிறமொழி பெரிதாக கருதினேன்,
விபத்தில் சிக்கினேன் உயிர் பிழைத்து மறுபடியும் வந்தேன் என் தமிழன்னை எனக்காக காத்திருந்தாள் தாய் அல்லவா அவள்...-
ஆதியும் அந்தமும்
ஆனவளே !
என் தமிழன்னையே !
மகிழ்வு பெருமகிழ்வு
ஆருயிராய் வந்த
என் அன்னைத்தமிழே !
என்றும் நிந்தன்
பாதம் தொட்டு தமிழாய்
வணங்கிட எனக்கு
அருள்புரிவாயா !
தமிழே என் தாயே
எந்தன் தமிழன்னையே
நீ வாழிய வாழிய வாழியவே !-
¶¶ 2000 ¶¶...
தமிழன்னை போற்றி !!!
[ முழுவதும் படிக்க
கீழேத் தொடரவும் ]
-
வெள்ளைக் காகிதத்தில்
' சிவப்பு மை பேனாவும் ,
சில நேரங்களில்
' கருப்பு மை பேனாவும் '
கொண்டு எழுதும் எனது
கவிதைகள் அனைத்தும்
" தமிழன்னையின் " மீதான
பேரன்பு கடிதங்கள் !
— % &— % &-
தலை நிமிர
வைத்து உலகிற்கே
முதன்மையாய்
இருக்கும் தாயாகிய
தமிழன்னைக்கே
எப்போதும் என்
முதற் வணக்கம் !
-
திராவிடத்தின் தனித்துவமாய்
ழகர நாதம் ஒலிக்க
எதுகையும் மோனையும்
ஒருங்கிணைந்து ஒருசேர
அகமும் புறமுமாய் திணை
பதினான்கும் பகுத்து நிற்க
தேனூறும் தேவாரமும்
உளமுருக்கும் திருவாசகமும்
திருக்குறளும் அறநூல்களும்
சந்தம் கூட்டி சங்கமித்திருக்க
அன்னைத்தமிழ் அழகுகண்டு
அகம்நெகிழ்ந்து உயிர் உருகியது
- பூமா பாலன்
-
நேரங்கள் நீளட்டும்
நிமிட மதில் மூழ்கட்டும்
தமிழன்னை ஆளட்டும்
தமிழ் என்னை ஆளட்டும்
மதி கெட்ட மடையனுக்கும்
மதிக் கெட்டும் வகையிலே
திக்கெங்கும் தீரமாய்
தமிழோசை ஒலிக்கட்டும்!!
-
தமிழன்னை
தலாட்டிய
கவிதையாமடி
நீ..
இன்னும்!
பக்கம்!
வாயேன்
பாராட்ட!
வேண்டும்!-