தவறுக்கு
தலை வணங்காது
தன்னிலை மாறாது
தன் சுயம் காத்து
தனித்து நிற்பது...-
சண்டைக்கு பின்
கோபங்களையும்
பிடிவாதங்களையும்
விட்டு விட்டு முதலில்
நாமே பேசிட
துவங்குவது...
பேரன்பின்
வெளிப்பாடேயன்றி
அது சுயமரியாதையின்
தோல்வியல்ல...!!!-
சுயமரியாதை இருக்குமிடத்தில் மட்டுமே
சுயவொழுக்கம் பிறக்கிறது.
நீ என்னைக் கவனி.
நீ என்னைக் கவனிக்காதே.
எனக்கதுவொரு பொருட்டல்ல.
நான் செய்வதை ஒழுங்காய்ச் செய்வேன்.
நீயென்னைக் குறை சொல்லும்
வாய்ப்பைத் தேடி அலுத்துப்போ.
இதுவே சுயமரியாதை.
சுயமரியாதை எங்கோ,
சுயவொழுக்கம் அங்கே!
-ஜெயந்தி முருகன்.-
சுட்டிக் காட்டப்படும்
தவறுகள்
திருத்தப்படாமல்
கண்டு கொள்ளப்படாமல்
செல்லும் போது
அடுத்த தவறை
நாம் கண்டும் காணாமல்
கடப்பது
நமக்கு நாமே தரும் மரியாதை.-
நம் மீது நமக்கிருக்கும்
நன் மதிப்பு,
நாமே நமக்கு தரும்
நற் சான்றிதழ்...-
சுயத்தை இழக்காமல்
பிறருக்கு தலை வணங்காமல்
எந்நிலை வரினும்
தன்னிலை மாறாமல் இருப்பது-
வாழ்வில் உன்னை பெற்றவர்களை
தவிர யாரிடமும் மண்டியிடாதே....
சுயமரியாதை தொலைத்த
வாழ்க்கை வீண்
சுயத்தை இழந்தவன் உயிரற்ற
உடலைப் போன்றவன்!!
-
மக்கள் மரங்களுக்கு சமமானவர்கள், காய்ந்த சருகுகளை போடலாம் தற்போது, ஒரு நாள் அந்த மரங்களில் பூக்கள் பூத்தே தீரும் உன் மீது தூவலாம், இரண்டிற்குமே அமைதியாக இரு உலகமே உன்னை போற்றலாம்..
-
பிறர் தவறுகளை
சுட்டிகாட்டிய பின்
எழும் நிகழ்வுகளில்
பாசத்துக்கு பணியாமல்
நேர்மை ஒழுக்கம்
வழி நின்று செயல்களை
நிகழ்த்துவதே சுயமரியாதை...-