கண்ணும் கண்ணும் nokia
படம்பிடித்துக் கொள்கின்றன.-
ஓடி ஆடும் அணில்
மொட்டை மாடி புறா
பூவிற்குத் தாவும் பட்டாம்பூச்சி
காலைச் சுற்றும் நாய்க்குட்டி
ஊரத்தண்ணீர்குடிக்கும் பசு
அத்தனையும் அழகுதான்
நீ ரசிக்கையில்...
கைதட்டி
கண்சிமிட்டி
சிரிக்கும் நீ
பேரழகு என்
குட்டிக்கண்ணம்மா🥰
-
செல்லக் குறும்புகளால்
எனை மயக்கும்
மனம் கொத்திப்
பறவையவள்
குட்டிக்கண்ணம்மா 🥰-
என்னால் அடிக்கோடிட்டு
நீ வாசிக்க
காத்திருக்கும் பக்கங்கள்..
...
...
அட இதென்ன
அங்கெல்லாம்
வெட்கப் பூக்கள்❤-
நினைவுகளைச்சுவைத்துக்கொண்டே
பருகும் தேநீரில்
பல சமயம் உப்பு கரிக்க
சில சமயம் இனிப்பு தூக்கலாக...
-
தாங்கிக் கொள்ள
முடியாமல்
கதறி துடித்து அரற்றி
போதும்டா சாமி
என்று அழுது
பெற்ற பிள்ளையைத்
தொட்டவுடன்
அத்தனைநேர வலியும்
மறந்து போகிறாள்
அன்னையவள்.-
ஒரு துளி தான் தயிர்
முழு பாலையும்
தயிராய் தோய்த்து விடுகிறது.
ஒரு துளி தான் எலுமிச்சை சாறு
முழுபாலை திரியவைத்துவிடுகிறது.
ஒரு துளி தான் ஆணினது
ஒரு புது உயிரை
பெண்ணுக்குள்
வளர்த்து விடுகிறது.
ஒரு துளி தான்
குழந்தையின்கண்ணீர்
பெற்றவர்கள் மனதை
கரைத்து விடுகிறது.-
சீக்கிரம் எழ வேண்டுமென்று
அலாரம் வைத்துப் படுத்து
அலாரம் அடிக்கும் முன்பே
விழித்து விடுவது
வாடிக்கை எனக்கு..
உங்களுக்கு???-
அம்மா இருக்கும் வரை
எதற்கும் கலங்காத தூண்..
அம்மா இறந்த பின்
சிறு காற்றுக்கும்
துவழும் துணி..
அப்பா என்பவர்
எல்லா பிள்ளைகளுக்கும்
வழிகாட்டும் ஹீரோவாக
அமைவதில்லை..
இறுதிவரை வில்லனாக சில
அப்பாக்கள்..
👇👇👇👇
-