தான் என்ற ஆணவம் உன்னை
தாழ்த்துமே தவிர உயர்த்தாது!-
காதோரங்களில்
சுருண்டு விழும்
முடியின் ரகசியங்களை
உடைத்தெறியும் அவளின்
கைகளுக்கு ஆணவம்
பலமடங்கு அதிகம் !
-
அவளுக்கு உலகமே
நீதான் என்று
பெருமை கொள்கிறாய்
ஆனால்
அவள் இல்லாத
உலகில்
நீயும் ஒரு
துரும்புதான்
என்று ஆணவத்தில்
மறந்து விடுகிறாய்........-
அவன்..
விழிக்கோளங்களின்..
அரை நொடி
விரிதலில்..
ஆணவப்பட்டு
போகிறது..
என் அழகு..-
அத்தான்னு சொல்லாதடீ
அடிச்சிருவேன் பாத்துக்கனு
ஆணவத்தில
நீ மறச்ச
நாணத்திலதான்
நான் விழுந்தேனடா
ஆணழகா!-
தான் என்ற ஆணவம் கொண்டவன்
சுயநலத்தில் முன்னேறுவானே தவிர
சுயசரிதையில் அல்ல!-
கற்றுக்கொள்ள தயாராக
இருப்பவர்களால் தான்
ஆசிரியராக இருக்கமுடியும்.
கற்றது கையளவு
கல்லாதது உலகளவு
என்பதை நினைவில்
வைத்துக்கொண்டால்
ஆணவம் என்பதேது!-
ஒரு நொடி யோசிக்காமல் உதிர்க்கும்
வார்த்தைகள் வாழ் நாள் முழுவதும்
யோசிக்க வைக்கும்
ஆணவம் கொண்டவரெல்லாம்
மண்ணாகி போன பூமியிது
என்பது நினைவில் கொள்வது நலம்!-
நான் நானாக இருப்பதால்
நிந்திக்கும் கோழைகளே;
மறவாதீர்கள்.
நீங்கள் கொண்டாடும் போதும்,
நான் நானாகவே
இருந்தேன்.-