ஆயுளும் அதிஷ்டமும் உனக்கு அதிகம் அத்தனை இழப்பிலும் தப்பி வந்தேன் என்பவர்களிற்கு தெரியாது வாழும் போதே மரணவாசலை பல தடவைகள் தொட்டுவிட்டுவந்த துரதிருஷ்டசாலி நானென்று!!!
வீறுகொண்டு எழுந்து நில்! சுவைப்பாய்... வீணாக ஒளிந்து கொள்! சுவைப்பாய்... ருசி பார்க்க நீ இருப்பாய்! சுவை கேட்க யார் இருப்பார்? துடித்த ஒன்றும் முடங்கி விடும்! உனக்காய் துடித்த ஒன்றும் முடங்கி விடும்! முடிவு ஒன்றே அடங்கி விடு! மனிதா அடங்கிவிடு!
காட்டாற்று வெள்ளம் போல் பாய வேண்டிய அறிவை சட்டென்று கட்டவிழ்த்துவிடாதே பெண்ணே!!!!! கேள்விக்குறியாகி போகும் பெண் கல்வியில்...... கலவி கற்பிக்கபட்டால் ஆத்திரம் என் பெயரில் அடி சாய்க்க அஞ்சாதே பெண்ணே!!!!! எத்தனையோ நவீன கருவிகள் இருந்தன அத்தனையும் உன் இறப்பிற்கு பின் பதில் சொல்லாது....
இந்த கடிதத்தின் வாசலில் களைத்து திரும்பிய தூறலுக்கு கல்லறை கட்டி நான் இறந்துபோகலாம் நின்று கடந்த வார்த்தைப்பூக்களின் வரித்தடயங்களை மிதித்த நீங்கள் மறந்தும் போகலாம்... இன்னும் கொஞ்சநாட்களில்.!