நடக்க பழகுமுன்னே
பறக்க துடித்தவளே!
நாவசைக்க, நீர் சுரக்க
அதில் நீந்த நினைத்தவளே!
அழ வைத்த அத்தனையும்
அடையாளம் கண்டவளே!
ஒப்பனையின் செலவொழித்து
மை போதும் என்றவளே!
வலியுடன் வந்தவருக்கு
சிரிக்க சொல்லி தந்தவளே!
பிரிந்து செல்லும் சிலரிடம்
பிரிவின் வலி கண்டாயா?
சிரிக்க தொடங்கு இன்பத்தில்,
அதுதான் பலம் சேர்க்கும் துன்பத்தில்!
யாதொரு உயிர்க்கும் தீங்கிழைக்கும்
நிலை வேண்டாம்!
புறம் கூறும் மனமிருந்தால்
வாழ பாதை இருக்காது!
பெற்ற உதவிகள் நினைவிருந்தால்
உன்னிடம் மனிதம் தோற்காது!
பொய் சொல்லி பழகாதே,
அது இருளின் புகலிடம் நெருங்காதே!
ஒழுக்கம் ஒன்றே உனை உயர்த்தும்
அது ஒரு வழி பாதை
உயர்ந்த இடத்தில் நிலை நிறுத்தும்!
வந்து போக பிறக்கவில்லை
வாழ்வதும் வீழ்வதும் வேறு கைகளில் இல்லை!
வரலாறு என்றும் நிலையானது
உன் வரலாற்றை நீ எழுது அதுவே சிறப்பானது!
-