ஒவ்வொரு வாரமும்
ஞாயிற்றுக்கிழமை
King of soul forever ன்
அன்னதானத்தில்
உதித்த கவிதை
-ஆதி-
கல்லூரி
NSS
முகாம் ஒன்றில்
கவிதைப் போட்டிக்காக
எழுதிய
எனது முதல் கவிதை!
⬇️
உள்ளே!-
வறுமை கவிஞனின்
வரிகள் அருமை
கிடைத்தது பெருமை
இருந்தும் தனிமை
அடைந்தான் முதுமை
-
உலகத்துல
ஏதாவது
ஒரு
மூலைல
யாராவது
கஷ்டப்பட்டுக்கிட்டுதான்
இருப்பாங்க.
எல்லாத்துக்கும்
வருத்தப்படறத
விட்டுட்டு
பாக்குற
இடத்துல
வறுமை
இல்லாம
பாத்துக்கிட்டா
எல்லாரும்
நல்லாருப்போம்
-
வெள்ளை முடி தலையில் வளையல் கூடை
கள்ளம் இல்லா முகத்தில் வருமை ரேகை - இருந்தும்
உன் மெய்யான உதட்டில் பொய்யான புன்னகை
எப்படி தாயே ?
BUVI-
மழைக்கும் கூட
பள்ளிக்கூடம் ஒதுங்காதவனாம்
அவன் பிள்ளைகளை
பள்ளிக்கூடம் வரவழைத்தது
வறுமை-
சிறகடித்து பறக்க நினைக்கிறேன்..!
பறக்க முடியவில்லையே..!
பறக்கும் நேரம் -நானோ
பட்டுத் துணியாகிவிட்டேனே..!
இதுதான் எந்தன் வாழ்க்கையா-இல்லை
இந்த பாமரனின் வாழ்க்கையா..!
[அவனின் அவள் 💕]
-
தேசியக் கொடி
உயரத்தின் உச்சியில்
பறக்கத் துவங்கையில்,
ஆங்கொருவன்
வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருள்கிறான்.......!
அய்யகோ!
வறுமையில் பூத்த தேசபக்தி...... !-