உன் நினைவில் இவள் வாட,
விழி இரண்டும் எதையோ தேட,
இதயம் மட்டும் உன்னை நாட,
ஏனோ இந்த வேதனை கூட?
நிழலைப் போல தொடர்ந்தேன்,
நினைவுகளாய் நிறைந்தேன்,
இமை மூடாமல் காத்திருந்தேன்,
இப்போதோ வாடி நிற்கின்றேன்!
வசந்த காலப் பூக்கள் கூட,
வாடிடுமோ உன் நினைவிலே?
இரவின் தனிமை எனை வாட்ட,
வருவாயோ என் கனவிலே?
-
Operation Sindoor is the saga of vengeance, carried
out on the 16th day, for the blood shed of the men
who were killed by Pakistani terrorists in Pahalgam
and for the kumkum lost by the women.
-
மயிலாய் மாறியே நீ
எழிலாய் தோன்றுகிறாய்
குயிலாய் மாறியே நீ
இனிதாய் பாடுகின்றாய்
கிளியாய் மாறியே நீ
கனிவாய் பேசுகின்றாய்
திருவாய் மலர்ந்து நீ
காதலை சொல்வாயோ?
-
தோகை இவளுக்குத் - தன்
தோகையைத் தந்து
தோகைக்கு அழகு சேர்த்த
தோகை மயில் எதுவோ?
-
எதிர்காலத்தில் மனிதன்
டைனோசர்களை சமாளித்தாலும்
இந்த ஊழல்வாதிகளை
சமாளிப்பது என்பது மிக கடினம்!-
காலை நேரக் கோலங்கள் - வாசலை
கலைநய மாக்கி
மாலை நேரம் அங்கே மகிழ்ச்சியோடு
வளையவர வைக்கும்-
காய்ந்து உதிர்ந்து போன சிறு இலை கூட
ஓர் எறும்பு கரைசேர படகாக அமைகின்றது
ஆனால் இருந்தும் சில மனிதர்கள் ஏனோ
தனக்கே பயனறறவராய் இருக்கின்றனரே!-
இந்த அழகிய மான் அருகில்
அந்த மானே வந்து நிற்கின்ற போதும்
வந்த மானைக் காணாது - தன்
சொந்த மானவனை எண்ணுகிறாள்..!-
நேரத்தை கடத்தவே சிலநேரம்
நினைவுகள் பாதை அமைக்கின்றன!
நெஞ்சத்தின் ஆசையெல்லாம்
வஞ்சிக்கு இசையாக சொல்கின்றன!
-