காதல் உணர்வுகள் யாவும்
கரைந்து போன பிறகு தான்
புரிகிறது .....
காதல் கவிதைகளின் சொற்களும் வெறும் எழுத்துக்களின்
கூட்டமைப்பு தான் என்று.... !-
எல்லா நேரங்களிலும்
முந்திச்செல்ல முனைவதால் மட்டுமே முன்னேறிப் போகவியலாது...!
சாலை கற்றுக்கொடுக்கும்
வாழ்வியல் கலை....!-
தெய்வங்களை
தொழுபவர்களை விட,
மதங்களுக்காய் மட்டும்
மன்றாடும் மனங்கள்
இங்கு அதிகம் ....!-
பூக்கள் ரசிக்கப்படுவது போல,
வேர்கள் ரசிக்கப்படுவதில்லை ....!
The roots are not as admired as the flowers....!-
துப்பட்டா போர்த்திக்கொண்டு மலைச்சாரலில்
சாலையைக் கடக்கும்போது
என் மனதையும்
ஏன் கடத்திச் செல்கிறாய்....!
அழகே ...!
அங்கு உன்னவன்
காத்திருக்கிறான் என்பதை கவனிக்காது
கவி பாடிவிட்டேனோ .....!-
பேரண்டத்தையே பிரகாசமாக்கிய நட்சத்திரம் வெடித்து கருந்துளையானபின்
ஒரு கதிரைக் கூட மறுக்கும்....!
வெறுத்தப் பொழுதுகளில்
அன்பைப் பொழிந்து,
ஏற்கும் கணத்தில்
என் பார்வைக்கு
பதில் கூறாது மறுக்கும்
என்னவன் போலத்தானோ....?-
உந்தன் அருகில் இருக்கும் பொழுதுகளில் யாவும்
என்னோடு சேர்த்து
என் கடிகாரத்தையும்
ஏன் ஆட்சிக்கொள்கிறாய்....?
இப்படி தறி கெட்டு ஓடுகிறது ....!-
In most of the times, we tend to seek solution without even glancing the problem. Remember, the way you look at the problem is the way of solution..!
-
மரணம் இருக்கும்
மலர்கள் மட்டுமே
மணம் வீசும் ....!
மரணத்தை மறந்து
வாழும் மனிதர்கள் யாவரும் நெகிழிப்பூக்கள் தானோ..!-
பூக்களாலும் புற்களாலும்
அண்டத்தை மெருகூட்டிய
ஆதவனே,
அவற்றிற்கு மகுடமாய் நிற்கும் பனித்துளியை நித்தமும் பறித்துக்கொள்கிறதே....!
கலப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்கள் போல ......!-