உன்னை தொட்டு
என் தாகம்
தீர்க்கிறேன்!
என் இறகுகள்
தொட்டு உன்
இதழ்களைப்
புதுப்பித்துக்
கொள்!-
வண்ணத்துப்பூச்சிக்களுக்கும்
கொள்ளை ஆசைகள்
தேவதையின் உடையில்
வலம் வந்திட-
வண்ணத்துப்பூச்சி
மீதான உங்கள்
காதல் அதனை
கையில் தொடாது
வண்ணத்தை
கலைக்காத வரை
அழகானதே !
-
இனிமையாய் விரிகிறது
சட்டென்று வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
வரவில் நாணம்
கொண்ட மலரொன்று
-
வாடிய மலருக்கு
வண்ணத்துடன் கூடிய
உயிர் கொடுக்கிறதாம்
வண்ணத்துப்பூச்சி-
இதழ்களை விரிக்காத பூக்களிடம்
ஏன் மல்லுக்கு நிற்கிறாய்
வண்ணத்துப்பூச்சியே..❤️-
நான் வந்த வழியெங்கும்
சாலைகளாகவே தெரிகிறது
முன்பொரு நாளில் இங்கு பூக்களின்
நந்தவனங்கள் இருந்தது யாரேனும்
அறிவீர்களா என்று கேள்வி
கேட்டு கொண்டு பறக்கிறது
கண்ணீர் துளிகளுடன்
உணவினை தேடி
வண்ணத்துப்பூச்சி
-
உனக்கான காத்திருப்பின்
வலியை சற்றே குறைத்து விட்டு செல்கிறது ஒரு வண்ணத்துப்பூச்சி....!-
என் கண்ணை
போலே துடிக்கிறாய்
விண்ணில் மண்ணில்
பறக்கிறாய்
பொன்னின் நிறமாய்
மிளிர்கிறாய்
உன்னை போலே பறக்க
உள்ளம் கொண்டேன் வா !
-
விடிவதற்குள் ஒருமுறையாவது
நிலவின் முகம் பார்க்க ஏங்கும் சூரியன்.
சூரியன் மீது மையல் கொண்டு
ஆவலுடன் காத்திருக்கும் சூரியகாந்தி.
அதன் மஞ்சள் இதழ்களில் தேன் குடிக்க
சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சி.
இவைகளுடன் நான்.
இது ஒரு குளிர்கால காதல் கதை.
-இந்துமதி-