விழி மூடும் போதெலாம்
பூக்கிறாள் இமைக்குள்ளே
பலவண்ணப் பூக்களாய்-
மலர்கள் மலர்ந்தது
மகரந்த சுகந்தம் கமழ்ந்தது
மனம் லயித்து மகிழ்ந்தது.
தாயின் கைகளில் தவழும்
பச்சிளங் குழந்தை போல்
பிறந்த புதுக்கவிதை ஒன்று
காகிதத் தூளியில்
கண் சிமிட்டி சிரிக்குது!-
என்னுள் நடக்கும்
யுத்தச் சிந்தையில்
சத்தமின்றி பூத்தாள்
புதுகவியாய்
முடிவில்லா முற்றுப்
புள்ளியைத் தேடி-
காதல் செய்ய
முடியாத போது
கொஞ்சம் கலவரம்
செய்யத் தானே
ஆரம்பித்திருக்கிறேன்!
புதுக்கவிதை!-
மரபுக்கவிதை மௌனமாய்
மொழியின் மாா்தட்டிக்
கொண்டிருக்க,
புதுக்கவிதை
புரியும் விதமாய்
புதுவிதமாய் அலங்கரித்து
கொண்டிருக்கிறது..,-
எழுத்துகள் சிதறி விழுந்தன
நீ படிக்கவில்லை
என்ற வருத்தத்தில்,
சீராக்க செய்வதறியாது
தவித்து போனேன்
ஆனால், உன் நினைவுகள்
வருவதை கண்டு
எழுத்துகள் எல்லாம் ஒன்றிணைந்து
பொருளுள்ள புதுக்கவிதையானது ..
-
புன்னகை பேசும் மொழியிலே
நீயே புதுக்கவிதை ஆகிறாய்..!
என் கவிதை பேசும் பொய்யிலே
நீயே மெய்யாய் தோன்றுகிறாய்..!
-
உன்னோடு நானும்
பேசத்தான்
புதுக்கவிதை ஒன்றை
வடிக்கின்றேன் அதில்
கவியாய் படைத்த
பொய்கள் எல்லாம்
மெய்யாய் நீயும் ஆனதென்ன ?-