சிதைத்து
போகும்
அன்பு கொண்ட
மனங்களை
ஆழமாய் ......-
அன்புக்குரியவர்களை
இழந்து விடுவோமோ
என்ற பயம் தான்
அவர்களின் மேல்
சந்தேகத்தை வர வைக்கிறது
ஆனால் அந்த சந்தேகமே
அவர்கள் நம்மை விட்டுச் செல்ல
வழி அமைத்து விடுகின்றது!
-
பொன்
வைக்கும் இடத்தில்
பொண்ணை
வைப்பதாலா
தான் பரிசுத்தமென்று
நிரூபிக்க அவள்
தீக்குளிப்பது ??-
வன்மம் நிறைந்த கூட்டத்தின்....
சந்தேக மனப்பான்மையால் ....
கொத்திக் கிழிக்கும் வார்த்தைகள்
கொட்டப்படும் வரை...
தனிமை தானியங்கு
விசையாக்கப்படுவதில்லை...!-
சிறகுகள்
இருந்திருந்தால்
பறந்திருப்பேனா
தெரியாது...
என்னுடைய
சந்தேகமெல்லாம்
இப்பொழுது
நான் தனக்குள்
முடங்கிக் கொள்ளும்
நத்தையா
ஆமையா
அல்லது வெறும்
கிணற்றுத் தவளையா
என்பதே ??-
உங்களுக்கு
நிரூபித்து
கொண்டே இருக்க
நாங்கள்
தீயில் இறங்கும்
சீதையும் அல்ல
தொட்டதற்கெல்லாம்
சந்தேகப்படும்
நீங்கள் எல்லாம்
ராமனும் அல்ல.....-
"நீங்கள் தொடர்பு
கொள்ளும் நபர்
வேறு ஒருவருடன்
பேசிக்கொண்டிருக்கிறார்"
என்றதும்
கணவனை/மனைவியை
வேறு ஒருவருடன்
தொடர்பு படுத்தி
பார்க்கத் தொடங்கிவிடுகிறது
சந்தேகம் கொண்ட மனது !!-
நதியாய்
பாய்ந்து எழும்
சந்தேகங்கள்
சங்கமித்திடும்
உனது விழியில்
விளக்க வழியறியாமல்
வலியை தின்று
விழிநீரை குடித்து
விலகிச் செல்கின்றேன் ...!!-
This garden is never going to grow....
Only for spying purpose...
யாரை நீ அதிகம் நம்புகிறாயோ
அவர்கள்தான் உன்னை முதலில் சந்தேகிப்பர்.
-
பல புரியாத
கேள்விகளுக்கும்,
பதில்களுக்கும்...
காலமும்
நேரமும்...
காத்திருக்கின்றது
பதிலளிக்க...💔-