செவ்வானமும் வெட்கம் கொண்டது
செவ்விதழில் சிவந்த உன் மேனி கண்டு
நிலவும் நிம்மதி கொண்டு
தேய்பிறையாய் தேய்ந்தது
தென்றலும் தொட்டுக் கொண்டு
தன் தாகம் தீர்த்தது
என்ன செய்வேன் நான்
உன் வசப்பட்டு
உன்னில் சிக்கி
உம்மை வசியப்படுத்திக்கொள்ள..-
காமம்
காமம் உடல் கொள்ளும் காதல்
கண்ணியம் காத்தால் உற்சாக போகம்
தவறிப்போயின் உயிர் கொண்டும் போகும்
உணர்வூட்டும் போது உயிராக மாறும்
உடல் சூட்டுக்கென்றால் வடுவாக வாழும்
வாடிக்கையானால் விளங்காது போகும்
வேடிக்கையானால் மீளாது வாழ்வும்
கட்டுக்குள் வைப்போர் சாதனையாளன்
மொத்தமாய் அற்றோன் ஞானத்தின் தூதன்-
உன்னைத் தொட்ட
எந்தன் விரல்கள்
விரதம் தவிர்த்து
விரகம் தொடருது
இதுதான் என்
தவ மோட்சமோ!-
பக்கத்துல ஓடுது ஆத்துதண்ணி,
அள்ளி அள்ளிக் குடிச்சிக்கறே;
தாகத்துக்கு இங்கே வழியில்ல..
தூரத்துல தெரியுது ஊத்துதண்ணி,
ஏனோ குடிச்சிப்பாக்கத் தோணுதே;
ஏக்கத்துக்கு இங்கே தடையில்ல..
அறிவு சொல்லுது போதுமுன்னு,
மனசு கேட்குது வேணுமுன்னு;
குழம்பிப் பாத்து நிக்கிற..
(வீட்டில் அறுசுவை உணவு இருந்தாலும் ஹோட்டல் சாப்பாடு தேடும் கணவன்மார்களுக்கு சமர்ப்பணம்.😎😎
சாமி சத்தியமா சாப்பாட்டத்தான் சொன்னேன்😁😁)
-
சில
நேரங்களில்
என்
நிதானத்தை
குலைக்கிறாய்
திசை
அறியாத
தென்றலாய்
திக்குமுக்காடிப்
போகிறேன்..
ஏனோ...-