.....
-
பள்ளி சென்று பாடம் கேட்டு
உண்மை என்று கூறும் பாப்பா!!
இங்கு சாயம் இன்றி யாரும் இல்லை, பாப்பா!
அதன் காயம் பற்றி கவலை இல்லை, நம்பு பாப்பா!!
இதில் உன்னை சொல்லி என்ன பயன் பாப்பா!
இவையே நமது அரசை நம்பி கண்ட பயன் பாப்பா!!
இந்த உண்மை உலகு அறியா பாப்பா!
இதில் பள்ளி பாடம் யாவும்
வெறும் மாயம் பாப்பா!!-
1) 3,86,137.5 கி.மீட்டர் நீள கயிறு
(நிலவை சுற்றிக் கட்டி பூமிக்கு மறுமுனை கொண்டு செல்வேன் எப்போது வேண்டுமானாலும் ஏறிச்செல்ல😋 தொலைவு 3,84,400கி.மீ சுற்றளவு 1737கி.மீ சுருக்குக்கு 0.5கி.மீ)
2) பார்க் மேசை
(உட்கார்ந்து வேடிக்கை பார்க்க
தனிமையில் அமைதியை ரசிக்க தூங்க 😴)
3) கடைசியாக கொஞ்சம் க்ரெயான் பென்சில்கள் (நிலவிற்கு வர்ணம் பூசி மகிழ🌚🎨)-
பிஞ்சி கைகள் நசிந்தன கண்டேன்
அதை நஞ்சு கைகள் புசித்தன நொந்தேன்
பால்மனம் மாறா மழலையன்றோ
அதில் பாலுணர்வு பார்த்தல் பாவமன்றோ
இச்சையின் எச்சம் எரித்த உடல்
இனி அப்பனின் முத்தமும் அறுவெருப்பு
ஆண்டவன் முன்னே சிதைத்தபின்டம்
இனி ஆலையம்கூட ஆறுதல் இல்லை
நீதிக்கொண்டு கொன்றபோதும்
தீரவில்லை கொள்ளா கோபம்
ஆண்மை அழிக்கும் பெண்மையன்றி
ஆற்றல் இல்லை எதிலும் இனி...
-