கனவுகளுக்கு அப்பால் ஒரு பேருறக்கம் கண் இமைகளை விடாமல் அழுத்திப் பார்க்கிறது இமைகளை பிய்த்துத் திமிறிக்கொண்டு எழுகிறது ஒவ்வொரு விடியலும் வாழ்வே ஒரு பெருங்கனவென
கதவுகள் தட்டுவதற்கானவை ஆனால் சன்னல்கள் திறந்திருக்க வேண்டியவை வெளிக்கும் நமக்கும் இடையே நின்று எண்ணற்ற பலவும் சாத்தியப்படுத்துபவை சாளரங்களைக் கொண்டு அவற்றை மூடிவிடாதீர் ஏனெனில் சன்னல்கள் சுதந்திரத்தின் ஆச்சரியக்குறி!