கலைந்து போகும் மேகங்கள்
என் கனவுகளை
களவாடிச் செல்லவில்லை...
தொலைந்து போன உறவுகள்
என் துயரங்களை
மீட்கப்போவதில்லை..
புதைந்து போன காயங்கள்
என் பாதையில் முட்களாக
இருக்கவிடுவதுமில்லை...
பயந்துபோய் இருட்டிலும்
ஒளிரும் மெல்லிய
வெளிச்சத்தை ரசிக்காமல்
நான் விடுவதுமில்லை...!!!
-
கற்பனை செய்தாலும்
விரும்பிய உருவம்
தெரியவில்லை என்றேனே
அந்த கோபத்தில்
கலைந்து போனதோ...-
கண்டதும்
இப்படியும் இருக்கலாமோ
என்று தோன்றுகிறது...
பள்ளிகளுக்கு விடுமுறை
அளித்தவுடன்
அந்த குழந்தையின்
பிராத்தனையை
நிறைவேற்றிய மகிழ்ச்சியில்
கலைந்து போனதோ மேகங்கள்...-
கலைந்த
மேகமும்
பின் தொடருதே!!!
உன் நினைவால்
பின்னிழுத்த
மாயமென்ன சொல்!!-
கதிரவன்
முகம் சுளித்து...
காரிருளை
நூதனமாய் அழித்து...
நம் சலிப்பைகளை உடனழைத்து...
வதைத்து
நம் களிப்பினை கலைத்தான்...!!!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
விரைந்து செல்லும் மாயமென்ன
அலைந்து திரியும் என்மனதும்
அவளை நாடி நிற்பதென்ன
தொலைந்து போன என்காதல்
திரும்பி வருமா தெரியவில்லை
உலைந்து உருகும் என்னுயிரும் - இன்னும்
உடலில் இருந்திடத் தேவையென்ன.-
கொண்டு வந்த காதலை
முழுதாய் தராமல்
முடிந்தா போகிறாய்...
என்னவன் சொன்னதை
சொல்லி விட்டு,
என்னவன் தந்ததை
தந்துவிட்டு போ...-
கவனமாகக் கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே
கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்
அட நம்ம
காலை நேரப் பூங்குயில்
பாடல் வரிகள் தான்
கண்மணி.-
ஒன்றுடன் ஒன்று
மோதிக்கொள்வதை
போன்று!! நீயும் நானும்
கலைந்து நின்று
மோதிகொல்வோம்
இதழ் வழியாக 💕-