என்ன ஒட்டினாலும்
எங்கும் எதிலும் சேராமல்
தனிமைத்தருணங்களை
தனக்கானதாக்கியது
உடைந்து நொறுங்கிய
கண்ணாடிச்சிறகுகள்-
உடைந்த கண்ணாடி இணைந்தாலும்
அதன் பிம்பத்தின் விரிசல் ஒன்றாவதில்லை...
உடைந்த காதல் மனங்கள் பிரிந்தாலும்
அதன் எண்ணத்தின் விரிசல்
இரண்டாவதில்லை...-
பிம்பம் காட்டிய
உடைந்த கண்ணாடியைப்
பார்த்து உள்ளம் கேட்டது,
உடைந்த பின்பும்
ஓடிக்கொண்டிருக்கும் எனக்கு
துணையாக வந்தாயா ?
என்னைப் போலவே
உனக்கும் வலிமை அதிகம் தான்!-
உனக்குப்
பிடித்தவளாகவே
இருக்க முயன்று
தோற்றுப் போய்
சுயம் தொலைத்த
என்னைக் கேலி
செய்கிறது
கண்ணாடி
"இதற்காகவா
இத்தனை பேரன்பு
காட்டினாய்"
என்று !-
//உடைந்த கண்ணாடி //
கண்ணாடிகள் உடைந்தாலும் பிரதிபலிக்கும் உண்மை ,
நம் உடைந்த இதயத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பேதத்தை மறந்தது விடுகிறோம்
கண்ணாடி அப் பிம்பங்களுக்கு ஒரு போதும் உரிமை கொண்டாடுவதில்லை
-
பிரிந்த உறவுகள் 💔💔
உடைந்த கண்ணாடி போன்றதாகும்....
அவற்றை அவ்வாறே விடுதல் நன்று..
ஏனென்றால்
சிலசமயம்
சேர்க்கும் கைகளையே அவை
காயப்படுத்திவிடும்......-
<<<<<<<<<<×>>>>>>>>>>
என் கண்ணாடி மனதில்
அனைத்தையும் எதிரொளிக்க
நினைத்தேன் ஆனால்
என் மனமோ பல கற்களால்
உடைந்த ஜன்னல் கண்ணாடி!-
ஏன் காதலில் தோற்றவர்கள் "நான் உடைந்த கண்ணாடி" என்று கூறுகிறார்கள்...
கண்ணாடி உடைந்தால் என்ன...
அதனுடைய அழகு காட்டும் திறமை குறைந்து விடாது...-