இன்று ஆடி வெள்ளி
நாளை ஆடிப்பெருக்கு..
ஒலிப்பெருக்கியில் ஒலிக்கிறது
"ஒரு தாலி வரம்
கேட்டு வந்தேன் தாயம்மா"...
என் மனதில் வந்துபோகிறார்கள்
முன்னணியில் "குஷ்பு"வும்
பின்னணியில் "சித்ரா"வும் ???
-
ஆடி பட்டம் தேடி வரும் என்றார்கள்
ஆனால்
ஆடியில் பிறந்த என் அழகு மட்டும் என்னைதேடி வரவில்லை
ஏன்?-
ஆடி ஆடி வாரும் அம்மா
ஆடிப் பாடி பரவசம் அடைய
ஆற்று வெள்ளப்பெருக்காய்
ஆடிப்பெருக்கெடுத்து வர
அகம் மகிழுதம்மா !!
எங்கள் வாழ்வை வளமாக்க வரும்
நின் வருகையைக் கொண்டாட
உற்றார் உறவினர் உடன்
மக்கள் வெள்ளம் திரண்டு
கரையினில் குவியுதம்மா !!
இயற்கை வளங்கள் செழிக்க வரும்
நின்னைப் போற்றி வணங்கிட
பக்குவமாய் முளைப்பாரி வளர்த்து
கரையினிலே நனைந்து குளித்து
புதிதாய் ஆடைகள் உடுத்தி
கன்னிமார்கள் அழைத்து
தலை வாழையிலை விரித்து
கனிகளுடன் தாம்பூலம் வைத்து
தீபாராதனைகளுடன் படைத்து
நின் பாதம் தொட்டு
உள்ளம் குளிர வணங்குகிறோம்
அம்மா !!
-ஜீவந்த்
-
அம்மனுக்கு உகந்த
ஆடி மாதம் முதல் நாளிலே
அதிகாலையில் நீராடி புது
ஆடை உடுத்தி உறவினர்
அக்கம்பக்கத்தினர் ஒன்றாய் சேர்ந்து
ஆடி தேங்காய் எடுத்து
ஓடு தேய தரைத்து
ஒரு கண் உடைத்து அதனுள்ளே
இருக்கும் தண்ணியை விடுத்து
அரிசி வெல்லம்
அவல்பருப்பு கலவையாக்கி
ஒன்றாய் தேங்காய் தண்ணியோடு
உள் சேர்த்து
அழிஞ்சிமரக் குச்சியை
ஓட்டையில் சொருகி
அத்தேங்காய்க்கு திருமஞ்சள் பூசி
குங்குமம் இட்டு
அக்னி மூட்டி நம் தீய எண்ணங்கள்
ஒழியத் தேங்காய் சுட்டு
ஆண்டவனுக்குப் பிராசாதமாய் படைத்து உடைக்க
அதர்மம் அழியத் தர்மம் வெல்லும் !
இவ்வாறே குருஷேத்திரப் போரில்
அதர்மம் ஒழியத் தர்மம் வெல்ல
நம் மூதாதையர் பின்பற்றினர்
அவ்வழியே கடைப்பிடித்து நாமும் தர்மம்
வெல்லப் போற்றுவோமாக !!
-ஜீவந்-
என் மனம்...
எனும் ஆற்றில்,
உன் நினைவெனும்...
ஆடி பெருக்கு,
ஆண்டு முழுவதும்.!
-இராதாஇராகவன்.-
தேங்(ன்)காயாே
ஆடிப் பிறப்பில்
சுடக் காத்திருக்கும் நெருப்பு..!!
-"சாெல்வித்தகர்"
கவிஞன்.வினாே..— % &-
"ஆடி" யில்
காதலை குறைக்க
சொல்வார்கள்...
அது
தம்பதியருக்கு மட்டுமே...!
தவிப்பவர்க்கு அல்ல....!!!
நமக்கு வருடம்
முழுதும் "ஆடி" தான்...
நீ அங்கும்...
நான் இங்கும்...
"ஆடி"போய் இருக்கும்
நம் காதலும்....💑
-
கோடிகள் செலவு செய்து
செம்மண் சாந்து நீக்கி
சிமெண்ட் பூச்சுகளால்
கட்டப்பட்ட கான்கிரீட்
வீடுகளும்
ஆடிக்காற்றில்
அசைந்து விடுகிறது....
அப்படியே
ஓலைக் குடிசைக்குள்
இன்னும் அசையாமலே
இருக்கிறது
நம்பிக்கை.
-