Ragavan Raja   (RadhaRagavan)
168 Followers · 57 Following

read more
Joined 28 April 2020


read more
Joined 28 April 2020
10 HOURS AGO

வண்ணத்து பூச்சியே....
உன்னை பிடிக்க முயன்ற,
என் விரல்களில்....
உன் நிறங்களின் மிச்சங்கள்!

எண்ணத்து சாட்சியே....
கண்ணை விலக்க முயன்ற,
என் மனதில்....
உன் நினைவின் எச்சங்கள்!

-இராதாஇராகவன்.

-


11 HOURS AGO

வாழ்க்கையை...
எழுத்து கூட்டி வாசிக்க தெரிந்த எனக்கு

மரணத்தின்...
நாட்களை கூட்டி கழிக்க தடுமாறுகின்றேன்.!

-இராதாஇராகவன்.

-


12 HOURS AGO

விழிகள்....
உரசிக்கொள்ளும் பொழுது,
காதல் பிறக்கும்.!

மனங்கள்....
உரசிக்கொள்ளும் பொழுது மட்டும்,
கண்ணீர் பிறக்கும்.!

-இராதாஇராகவன்.

-


12 HOURS AGO

அன்பால்தான்....
மனிதம் உயிர்த்திருக்க முடியும்!

கண்ணீரில்தான்...
காதலும் காத்திருக்க முடியும்.!

-இராதாஇராகவன்.

-


12 HOURS AGO

"தினம் ஒரு பாடல்.!

வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா (2)
வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா
மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா

செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா"

திரைப்படம் : அபியும் நானும் (2008)
நட்சத்திரங்கள்: பிரகாஷ்ராஜ், திரிஷா
பாடலாசிரியர் :வைரமுத்து
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன்
இசை : வித்யாசாகர்
இயக்கம் : ராதா மோகன்.

-இராதாஇராகவன்.

-


YESTERDAY AT 0:28

அவளை....

அந்த குளிரூட்டப்பட்ட
நிழற்குடைக்கு...
கீழேதான் இருக்கின்றேன்!
ஆனாலும் தகிக்கின்றது...
அவள் வருகை தாமதமாவதில்!

-இராதாஇராகவன்.

-


YESTERDAY AT 0:16

நாள் என்பதும்,
நானென்பதும்...
வாழ்வென்பதும்,
நீயும்...
இருந்தவரைதான்.!

-இராதாஇராகவன்.

-


YESTERDAY AT 0:05

உண்மையை....
சொல்வதென்றால்
இப்பொழுதெல்லாம்,
மூகமூடிகளே....
தங்கள் உண்மையான,
முகமறியாமல்...
தேடித்தவிக்கின்றன!

-இராதாஇராகவன்.

-


20 JUN AT 23:57

Vitel என்பது...
லத்திய மொழயில்,
ஒரு பெண்ணின் பெயர்.!

கூடவே....
வாழ்க்கையென்றும் (life)
சொல்லப்பட்டிருக்கிறது!

தமிழில் மட்டுமே,
உயிர் என்று அர்த்தமாகின்றது!

"பெண் என்பவள்...
பெண்ணாய் உயிராய் வாழ்க்கையாய்...
உணர்த்துவது தமிழ் மட்டுமே"


-இராதாஇராகவன்.

-


20 JUN AT 23:35

தினம் ஒரு பாடல்.!

"தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா(2)
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா"

திரைப்படம் : ஊமை விழிகள் (1986)
நட்சத்திரங்கள்: விஜயகாந்த், சரிதா கார்த்திக், சசிக்கலா.
பாடலாசிரியர் : ஆபாவாணன்.
பாடியவர்கள் : பி பி ஸ்ரீனிவாஸ்
இசை : மனோஜ்-கியான்
இயக்கம் : அரவிந்தராஜ்.

-இராதாஇராகவன்.




-


Fetching Ragavan Raja Quotes