"விண்ணை நோக்குமா
அறுந்தப் பட்டம்
இனியென்னப் பெருமை..?!"
- கவிஞன்.வினோ..
-
"விடாத மழையில்
சொட்டுநீர்ப் பாசனம்
மழைக் குழிகள் அழகாய்..!!"
- "சொல்வித்தகர்"
கவிஞன்.வினோ..-
"வண்ணத்துப் பூச்சி
வாசல் தேடும்
எழுதுகோல் மனசு..!"
-"சொல்வித்தகர்"
கவிஞன்.வினோ..-
"காய்ந்த ரோஜா
இன்னும் இளமையாய்
புத்த(அ)கத்தில்..!"
-"சொல்வித்தகர்"
கவிஞன்.வினோ...-
கொட்டித் தீர்க்கும் மழையில்
எட்டிப் பார்க்கும் காளானாய்
ஏக்கப் பார்வையில் குடை..!
-"சொல்வித்தகர்"
கவிஞன்.வினோ..-
தீராக் கோப்பைத் தேடும்
தெளியா மனம்
வெயிலிலும் வற்றாத் தேநீர்..!
-"சொல்வித்தகர்"
கவிஞன். வினோ..-
தீரா எரிபொருளால்
நிலவை வாழ்த்த நினைக்கும்
மின்மினி..!
-"சொல்வித்தகர்"
கவிஞன். வினோ..
-
"மழை சுமக்கும்
மண் வாசத்தில்
புழுதி முகம்
புன்னகைத்தபடி..!"
-"சொல்வித்தகர்"
கவிஞன். வினோ..-
வெயிலும் நீயாய்
இளங்குயிலும் நீயாய்
குளிரும் நீயாய்
குதூகலமும் நீயாய்
களமும் நீயாய்
காலமும் நீயாய்
கவியாய் யானும்
காவியம் போற்றுகிறேன்
தமிழே அமிழ்தே..!
-"சொல்வித்தகர்"
கவிஞன். வினோ..
-
கூவாக் குயிலும்
குயினாகும்
குரல்(ள்) முயல்கையில்..!
-"சொல்வித்தகர்"
கவிஞன். வினோ..
-