கனவுகளை காற்றோடு
கரைத்து விட்டு
கடமைகளில் மூழ்கியே
கிடைத்ததை வாழ்ந்து விட்டு
விதியின் பெயரிட்டு
நானும் இவ்வாழ்க்கையில்
தொலைந்து விடவா பலரைப் போல.....
- ஜீவன்மொழி-
குழந்தையாய் தவழ்ந்து
பறவையாய் திரிந்தோம்
பாசத்தின் வலையில்
பண்பட்டு வளர்ந்தோம்
பந்தங்களை பகிர்ந்து
சொந்தங்களாய் சேர்ந்தோம் !
ஆயா தாத்தா வீடு
சொல் மட்டும் ஆனதே
அன்பும் கம்பீரமும் கரைந்தே போனதே
வெறுமையும் சேர்ந்தே வெறிச்சோடி போனதே !
நிகர் இல்லா நினைவுகள் பல பல
கண்முன்னே வருதே கண்ணீரும் தருதே.....
வருந்தினாலும் நீங்கள் தந்த அன்பு
வாழ்க்கைக்கு நன்றி கூறி வணங்குகிறோம்
என்றும் உங்கள் நீங்கா நினைவுகளுடன்....
- ஜீவி
-
சிறிய உரையாடல்
நிறைய புரிந்துணர்வு
அலட்டிக்கொள்ளா பாசம்
ஆழம் கடந்த நேசம்
கைவிரல் பிடிப்பதில்லை
கை விடுவதும் இல்லை
எங்கள் உலகம்
எல்லைகள் இல்லாதது ...
- ஜீவன்மொழி
-
ஆர்பரிப்பிக்கும் அமைதிக்கும் இடையே அலைபாயாமல் நடுநிலையாய்
பயணிக்க தேவைதான்
நெடியதோர் புரிந்துணர்வு
உன்னைப் பற்றி !-
We are running towards
a point which
meet all our expectations !
But in reality
There is no such place !!
- ஜீவந்த்
-
மாற்றங்கள் நிரந்தரம் என்றாலும்
மாற்றமில்லாமல் கடத்தி வரும்
வழக்கம்
பிறந்த வீட்டிலேயே
பெண் விருந்தாளியாவது !!— % &-