போகும் பாதை தூரமில்லை.
போக தான் ஏனோ பாதையில்லை...
பாதை வெட்டி புறப்பட்டாலும்
பாதியில் பகைக்கு பஞ்சமில்லை...
கேட்டதை கொடுத்து முன் சென்றால் தான்
கேட்காமல் கிடைக்கும் தேவை எல்லாம்...
கொடுக்க கையில் இல்லை என்றால்,
எளிதில் எதுவும் கிடைப்பதில்லை...
அப்படியும் கிடைத்தால் அது
ஏழ்மையை தவிர ஏதுமில்லை...
-