மழையுடன் ஏற்பட்ட கூடலில்
கர்ப்பம் தாங்கி நிற்கும் புல்வெளி
-
टूटकर तारे जमीं पर गिरते नहीं,
बिछड़ने वाले कभी मिलते नहीं।
जल्द मिट जाते हैं तन पर लगे घाव,
मन पर लगे घाव कभी मिटते नहीं।
है शौक दिलबरी का, तो संभल जरा,
हर शख्स में वफादारी दिखते नहीं।
जज्बातों का समंदर तो रोक लिया है,
मगर अश्कों के धारे कभी रुकते नहीं।
खुश्क आंखों में एक सैलाब देखा है,
मचलते हैं लहरों सा, मगर बहते नहीं।-
மழை வந்ததும்
இதயத்தில்
உறங்கும் உனை
எழுப்பி விடுகிறேன்
இணைந்து ரசிக்க...-
ஒரு கோப்பை
தேவையில்லை
ஒரு துளி
மழைநீர்
போதும் போலும்
எழுதா விரதம்
முடித்து வைக்க...-
திரண்டு வரும் மேகம்,
திகைப்பூட்டும் மின்னல்..
தேகமெங்கும் குளிர்,
வானமெங்கும் வானவில்..
சூடான தேனீர்,
சுகமான ராகம்..
உலராத குடை கீழ்,
உதட்டோர புன்னகை..
-
முதல் சில துளிகளை
வரமென்று வாசனையோடு
கொண்டாடும் ஈரம் காணாத
மண்ணிற்கு...
கொட்டி கொண்டேயிருக்கும்
அடைமழையின் சேறும்
சகதியும் ஏனோ நசநசப்பாகி
விடுகிறது ...
நனைத்துப்போவதும் சகதியாவதும்
மழைக்கும் மண்ணுக்கும் மட்டும்
பொருந்தாது...
இன்னும் பிறவும்...!-
கொஞ்சம் அதிக
குமுறலுடன்
படபடவென
இவள் வீட்டின்
ஜன்னல் தட்டியது
மழைச்சாரல்
இறுக்க மூடிய
இதயத்தில் இருக்கும்
கவிதையை தேடி....-
"நனையலாம்
வா"
என்றான்
காதலன்...
"நனையாமல்
வா"
என்றான்
காவலன்
ஆனபின்...-