அடி நெஞ்சை தீண்டி,
பாராட்ட தூண்டும்
வரிகளை எழுத
முயற்சி செய்யும் எனக்கு,
உன் புன்னகையும்,
அரங்கு நிறைந்த கைத்தட்டலே..-
An Engineer by profession..😊😊
Love to write Tamil poetry and lyrics...... read more
அர்த்தமற்ற சிரிப்பு,
சிலருக்கு அறிவு சிதறலால்
ஏற்படும் விளைவு..
சிலருக்கு காதல் தொடக்கத்தின்
வருகை பதிவு..-
மழைக்கால வானவில் நிழலாய்,
தரையில் திகைப்பூட்டும் பெண்மயில்..
திகட்டாத சர்க்கரைப்பாகாய்,
அவளின் இதழெங்கும் புன்னகை..
முடிக்காத கவிதை வரிக்கு,
கிடைத்த முதல் பக்க முகப்புரை..
சலிக்காத காதல் ஆசைக்கு,
அவள் விழியின் சம்மதித்த கண்ஜாடை..
இவை அனைத்துமே, என்றும்
என் நெஞ்சில் அழியாமல் இருப்பவை..-
பேனா மையும்
பேராசை கொண்டு,
எழுதி எழுதி,
கொண்டாடி தீர்க்கும்
ஓர் அழகிய கவிதை..
உன் பெயர்...-
காட்சிகளை அழகாக்கி,
காணாமல் போகும்
காணல் நீர் போல்,
கனவில் மட்டும் வந்து
போகும் உன்னை,
கண்ணெதிரே காண,
இன்னும் எத்தனை
காலம் ஆகுமோ..-
அரை கனாவில்,
பார்த்த முகம்..
அகம் எங்கிலும்,
உன் கால் தடம்..
நிழல் போலவே,
என் மனம்..
ரயில் போல உனை,
தொடரும் தினம்..-
மௌன மொழியில்,
உன் இதழ் சிரிப்பு,
என் கவிதை பாஷை..
வெட்க மழையில்,
உன் ஓர விழி பார்வை,
என் மது போதை..-
இடைவிடாத மழையில்,
என் செவி எங்கும் அவள் குரலில்,
சூரியனுக்கு தெரியாமல் இரவை
நீட்டித்து கொண்டிருந்தோம்,
நானும் அவளும்...-
மின்னுவதின் அர்த்தம்
தங்கமும், வைரமும்,
பிலாட்டினமும் பாடம் கற்க
வேண்டும், உன் அங்கத்தை
கண்டு..-
கற்பூரத்தை விட அதிவேகமாக
பற்றி கொள்ளும் காதல்,
அனைய மட்டும் ஆயுள் கூட
போதாது என்கிறது..-