சுவாரஸ்யத்திற்கு பின்பான
சலிப்பிற்கு மனித மனம்
மட்டுமாவது அப்பாற்பட்டதாய்
இருந்திருக்கலாம்...
அல்லது இந்த மனமாவது
அதற்கு அப்பாற்படாமல்
இருந்திருக்கலாம்...!-
காலாவதி ஆகிவிட்டதாக
அப்புறப்படுத்தியதன் உத்திரவாத
அட்டையை தூசு படாமல்
பத்திரப்படுத்தும் மனதிற்கு...
ஆளில்லாத கடையில் டீயை
ஆத்தும் கடைக்காரரின் சாயல்...!
(உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு
அளவே இல்லையாப்பா 🤦♀)-
ஒன்று மாற்றப் பார்
அல்லது முடியவில்லை
என்றால் ஏற்றிட பழகு...
இரண்டிற்கும் இடையில்
சிதையாதே...
சிதைக்காதே...!-
வேண்டுமா வேண்டாமாயென்ற
யோசனைகளுக்கிடையில்...
புத்தரின் போதனையும் மழலையின்
பிடிவாதமும் மோதிக்கொண்ட
நொடிகளில்...
வேண்டுமென்று முடிவெடுத்தேன்...
மழலை பிடிவாதங்கள் தலை
தூக்கும் போதெல்லாம் புத்தரின்
போதனைகள் அதை அடக்கி ஆள
வேண்டுமென்று...!-
இறுதி ஊர்வலங்கள் எடுத்துரைக்கின்றன,
சம்பாதிக்க வேண்டியது பணங்களை அல்ல,
நல்ல மனங்களை என்று!!!-
யதார்த்தமாய்
சிரித்திடும் மனம் அழகு
எதிர்பார்பின்றி உதவி
செய்யும் மனம் அழகு
பிறர் மனம் நோகாமல்
பேசும் மனம் அழகு
சூழ்நிலை அறிந்து ஆறுதல்
கூறும் மனம் அழகு
கோபத்தில் இருக்கும் போது
சிரிக்க வைக்கும் மனம் அழகு
-
மகிழ்ச்சியும் கவலையும் அந்த
நொடி உணர்வு தான்...
மனம் தான் அதை சிறைப்படுத்தி
உருப்பெருக்கி மலைத்து மலைத்து
மாய்ந்து போகிறது...!-
ஓய்ந்த பின்பு ஓய்வெடுக்கும்
துளிகளை துளிர்க்க நினைக்கும்
மனதிற்கு தெரிகிறது அது ஆசையென்று...
தடைப்பட்ட உரையாடல் மௌனத்தின்
பிடியில் மாட்டிக்கொண்ட பின்பு
அவதானிக்கும் புரிதலை வேண்டும்
மனதிற்கு தெரியுமது எதிர்பார்ப்பென்று...
என்னவென்றே தெரியாமல் அங்குல
அங்குலமாய் முன்னேறும் அந்த
வசியத்திற்கு பெயர் தான்
என்னவென்று தெரிவதில்லை மனதிற்கு...
அதை தடுக்கும் வழியும் கூட...!-