என் தோள்களில்
நீ தூங்க தந்தையாய்
என்னை ஆக்கினாயே
மார்பினில் முகம் புதைக்க
மழலையாய் நீ மாறினாயே
நான் புன்னகை செய்ய
உன் சோகம் மறைத்தாயே
நீங்காத நினைவுகளை
சொல்ல ஆனந்தமாய்
கண்ணீர் கரை புரள்கிறதே ...-
8 OCT 2018 AT 22:45
1 MAR 2020 AT 6:06
மழைநீரில் ( விழி நீரில்)
நனைந்த போதும்
வண்ணம் நீங்காத
வானவில்லைப் போன்றது.
எனக்கும் அவளுக்குமான உறவு.-
27 JAN AT 19:21
நின் ஞாபகங்கள்
நினைவோடு உருக
மெய்ப்பித்துக் கொள்கிறேன்
என் காதல் நிகழ்வுகளை..
கவிதாயினி-
19 DEC 2021 AT 7:29
.......நீங்காத நினைவு........ மேகத்தில் காற்று பட்டதும்
மழையை போல்,
உள்ளத்தில் உன் நினைவு பட்டதும்
கண்ணீர் தானே......-
2 AUG 2021 AT 22:35
இரவுகள் முடிந்தாலும்...
அவளது நீங்காத
நினைவுகளால்
நீள்கிறது எந்தன்
இரவுகளும் தேடல்களும்....
-