நெடுஞ்சாலையில்
பயணிக்கிறேன்
நின் ஞாபகங்களை சுமந்து இளைப்பாறத்தான்
நேரமில்லை.. ஏன்
வசதியும் இல்லை..!!
கவிதாயினி
-
எட்டும் தூரத்தில்
நீ.. இல்லை
கிட்டும் மனத்திடத்தில்
நீ..மட்டுமே
என் வ(வா)சமாய்..!!
கவிதாயினி-
தேடும் போதே
தெரியாமல் போவதும்
தேடி களைத்து சருகாகி போவதும்..
மீண்டும் தேடும் போது
கிடைத்த பின் பந்தமில்லாது போவதும்..
தேடும் தேடலின் சாபமே..
தேடி தேடி ஓய்ந்த பின்
வரும் தேடலில்..
விழி வியர்வையே
மீஞ்சும்..!!
கவிதாயினி-
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
சொல்லாத காதலும்
ஓடி ஒழிந்து ஆட
காலதாமதமானது நேரங்கள்..
மீண்டும் முடிச்சவிழ்க்க
பாதிதூரம் கடந்தனவோ
விளையாட்டு..!!
கவிதாயினி
-
என் இதய வெற்றிடங்களை
நிரப்புவது
உன் காதல் நினைவுகள்
என்பதால்..
இதயக்கோப்பை
நுரை ததும்பி நிரம்பி
வழிகிறதடா..
கவிதாயினி-
உன்னை நேசிப்பதிலும்
அதிகமாய்
காற்றாட நீ வந்து போகும்
கனவுகளை நேசிக்கிறேன்
ஏனெனில்..
இருப்பதால்..!!
கவிதாயினி
-
தேடாமல் கிடைத்த
நேசம் நீ
காத்திருந்த காதலால்
நேயம் தந்து
தோள் சாய வைத்தவனும்
நீயே..!!
கவிதாயினி
-
அமர்ந்தாலும்
யன்னலோர இருக்கை
வேண்டும் என
சிறுபிள்ளைப் போல
அடம்பிடிக்குதே மனது..!!
கவிதாயினி-
நின் ஞாபகங்கள்
நினைவோடு உருக
மெய்ப்பித்துக் கொள்கிறேன்
என் காதல் நிகழ்வுகளை..
கவிதாயினி-