வேண்டாம் வளராதே..!
(கீழே படிக்க..)-
நான் தோற்று போகும் நேரத்தில் நீ என் அருகே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.....
உன் நினைவுகள் போதும் என்னை ஊக்கப் படுத்த.......-
அவனறிவான்
நான் போட்டுக்கொள்ளும்
சர்க்கரையளவு..
அருமைரகத்தில்
அழகாய் நீட்டினான்
எனக்காய் போட்ட
குளம்பி..
"வரப்போறவ குடுத்து வச்சவ"
என்ற பொறாமையிலும்
பூரிப்போடு குடித்தேன்
தம்பி தந்த குளம்பியை...!!-
தம்பி: இங்க வச்சிட்டு போன ஸ்னாக்ஸ் எங்க டி🤨
நான்: நா பாக்கலயே டா.. நீ இங்க வச்சியா??🤷🏻♀️
தம்பி: பொய் புலுகாதா..புலுகு மூட்ட நீதான் தின்னுறுப்ப🤨
நான்: இல்ல டா🙁
தம்பி: உண்மைய சொல்லுடி😡
நான்: அது ஒன்னு இல்லடா.. நா சும்மா
சுவை எப்பிடி இருக்குன்னு பாக்கலானுத்தான்
வாய்ல்ல வச்சுப்பார்த்தேன்😒
தம்பி: அடியே.. சுவை பார்க்குறேனு கொஞ்ச கூட வைக்காமா தின்னுருக்க.. இதான் சுவை பார்க்குரதா..
இதுல பெருசா வச்சு பார்த்தலாம்🤨
நான்: 😔😔😔😔
நான் சாப்படனும்னு ஒன்னு சாப்பிடலயே🤷
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
முகமூடி மனிதர்கள்...
முகவரி மறைத்த மனிதர்கள்...
முகஸ்துதி செய்யும் மனிதர்கள்..
முகாந்திரம் இல்லா மனிதர்கள்...
அனைவரிடமும் ஜாக்கிரதை
என் அன்பு தங்கைகளே...தம்பிகளே...-
பழகிய காலம் சிறிது,
அன்று முதல் இவன்
எனக்கு நல்ல நண்பனாய்
ஆறுதல் கூறும் ஆன்மாவாய்
அரட்டைகளில் துணையாய்😜
அனைத்திற்கும் மேலாய்
தம்பியாக மாறிய நண்பன்! 😍
-
உடன்பிறப்பு
ஒன்றாக நின்றதில்லை
புகைப்படத்தை தவிர
வேறெதிலும்!
நொடிக்கு நொடி
சண்டைகள் நிகழும்!
அந்நேரமெல்லாம்
வீடே போர்க்களமாய்
திகழும்!
ஆனால் அவனுக்கு
ஒன்றென்றால் முதலில்
இந்த கண்களில்
கண்ணீர் தவழும்!
-
பேரன்பு அக்கா..மகிழ்வு அக்கா..
என அகம் மகிழ அழைக்கும்,
தனலட்சுமி மைந்தனுக்கும்,
என் அன்பான தம்பிக்கும்
"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.."
பெற வேண்டும்.. நீ பார் போற்றும்
வெற்றிகள் அனைத்தும்..
அதைக்கண்டு, நின் தாய் பெற
வேண்டும் பெற்ற பொழுதைவிட
பெரும் மகிழ்வை....
-