பிறர் நலத்தை விரும்பும்
போதெல்லாம்,
சுயநல போதனையே
கிடைக்கிறதெனில்,
கிடைத்ததை வைத்து
வாழ பழகிக்கொள்ளுங்கள்!-
என் மீதான மதிப்பீட்டில்
எனக்கெப்போதும் குறையில்லை
எல்லோரும் என் திறமையை
நம்பினால்,
நான் என் திறமையை
சந்தேகித்து இன்னும் வளர்ப்பேன்!
எல்லாரும் என் திறமையை
சந்தேகித்தால்,
நான் என் திறமையை
அதீதமாய் நம்பி இன்னும்
வலுவடைய செய்வேன்!
-
"நீ எதையுமே மாற்ற முடியாது
நடப்பது நடந்தே தீரும்!"
இந்த 'எண்ண அலை'
நின் மனநிலையை
தீர்மானித்தால்,
கவலையின் ஆயுட்காலமும்
மகிழ்ச்சியின் ஆயுட்காலமும்
ஒன்றேதான்
என்பதை நீ கண்டறிவாய்!
-
எது வந்தாலும்
பார்த்துக்கலாம் வா!
என்ற நிலையை
எல்லாம்
கடந்தாயிற்று!
தற்போதைய நிலை,
"ஓவரா சீன் போடாத,
எல்லாம் பார்த்தாச்சு வா!"
என்பதுதான்.-
ஒத்தையாய் இருக்கிறது
என்ற பரிதாபமும்
வேண்டாம்!
தனித்து தரமாய் இருக்கிறது
என்ற பாராட்டும்
வேண்டாம்!
ஏனெனில்,
உங்கள் கவனத்தை
களவாடுவதற்காக
மலர்கள்
மலர்வதில்லை!-
எதிலிருந்து எல்லாம்
மீளமுடியாதென
விதி எழுதப்பட்டிருக்கிறதோ,
அதிலிருந்து எல்லாம்
மீண்டு வந்த
விதி வில(ள)க்கை,
நீங்கள் ஒருபோதும்
சிறையில் அடைக்க
முடியாது!-
மனிதனுக்கு
கெட்டவனாக
இருப்பதில்
பிரச்சனை இல்லை!
மற்றவர்கள் தன்னை
கெட்டவனாக
நினைத்துவிடக்கூடாது
என்பதில்தான்
பிரச்சனை!-
தேடும் போது எளிதில்
கிடைத்துவிடும்.
என்ற பொருட்களை
பத்திரப்படுத்த வேண்டிய
கட்டாயமில்லைதானே!
இந்நிலைதான்,
சில மனிதர்களுக்கும்!-
என்னிலிருந்து
எதையும் மாற்றாமல்
என் வாழ்வை அழகாய்
மாற்றியவரை
தெய்வமென்றுதானே
அழைக்க முடியும்.
கண்களுக்கு தெரியும்
கடவுள்
"என்னவர்"!
-
நாட்டை வலம் வரவே
கூட்டில்
அடைந்து கிடந்திருக்கிறோம்
என்ற உண்மை
கூட்டை விட்டு
வெளியேறும் வரை
பட்டாம் பூச்சிக்கு தெரியாது!-