தமிழை செம்மொழியாக்க பாடுபட்டவர்
இன்று விழிப்பில்லா நித்திரையில்.....
RIP Kalaignar Karunanidhi
-
கலைஞன் என்ற பொதுப் பெயரும்
உன்னை மட்டுமே அடையாளப்படுத்தி
நிற்கும் தனிப் பெயரானதேன்??
நாள் முழுக்க காத்து நிற்கும்
சூரியனும் உனக்கானதாய் இன்று
உரிமைகள் பல கொண்டாடுதே!!!
என் பிள்ளைப் பருவம் முதலே
உன்னை ஒரு போராளியாக
கண்டேன்... என் தாய் தமிழினை
தாங்கும் ஒரு பெரும் போராளியாக..
ஒரு அரசியல் தலைவனாய் என்
அறிவுக்கு எட்டியதை விட தமிழை
தாங்கி நிற்கும் ஒரு சாணக்கியனாய்
உன்னை அறிந்தே வியந்தேன்!!
நீ இட்ட தமிழ் வழிப் பாதையில்
தமிழன் என்ற கர்வத்தோடு
நின் தமிழ் சமூகம் நடைபோடும்...
தளராது ஓய்வெடு தமிழ் கட்டுமரமே!!!!!
- Nandhini Murugan-
மூடத்தனத்தால் மூடிப்
புதைக்கப்பட்டவர்கள் மத்தியில்
முட்டி முளைக்கின்றது ஒரு
புதுமை விதை..
பழையனகளிலிருந்து
விடுதலையடைய
போர்வாள்கள்
தேவையில்லை...
பேனாவும்
பேச்சுரிமையுமே
போதுமானவை...
'பராசக்தி'யும் சொல்வது
இதைத்தான்..
HBD கலைஞர்🙏-
கண்களிலே நீருமில்லை!
கள்ளியிலே பாலுமில்லை!
ஆதவன் அஸ்தமனமானது...
அன்னைத்தமிழ் மகளும் அறியவில்லை!
செம்மொழிக்கு நாளெடுத்த
திருமகனார் மேனி எங்கே!
முத்தமிழ் சாரெடுத்து....
வைரநடை கவிபுனைந்து
வான்முழக்கமிட்டவரே!
நீ வசந்தம் தந்த வரலாறு....
எம் தமிழுலகக் கவிப்பேறு!
முத்தமிழ் மணாளன்
முத்துவேல் கருணாநிதி.....
-
துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பார்கள்.
முதல் முறையாய் உணர்ந்தேன்!
அண்ணாவின் இதயம் சுமந்து,
சத்தமில்லாமல் சந்தனப் பேழையில்
நீ பூமித்தாயின் மடிக்கு சென்ற போது!
கல்லும் கூட கரையுமே...
நான் மட்டும் எம்மாத்திரம்???!-
RISING SUN
Popularly,he was known as 'KALAIGNAR',
Improving every field in his land,
He was a non co-planner.
He expressed the pressing need of self respect,
Which had a world wide effect.
Ruling the longest tenure,
Discrimination in his people, did he cure.
He sowed the seeds for social justice,
And taught that everyone are amongst us.
He made sure every person is provided with education at liberty,
And that, knowledge fills every mind empty.
He was ready to drown,
For taking his education as crown.
The richest man had to lend,
His qualities of how to bend.
He did not want to be known for his caste,
But for what he did, till his breadth last.
He was known as rising Sun,
As he did not rise alone,
But he and his words inspire every star
To rise as a shining sun.-
Kalaignar Karunanidhi ❤️
Tamil Patrioteer
Political Legend
Affable Politican
Master Mind Icon
Intellectual Scholar
Irreplaceable Leader
Silver-Tongued Orator
Excellent Script Writer
Distinguished Administrator
Torchbearer of Dravidian Ideology
June 3, 1924 - August 7, 2018 ❣️-
You can hate a person
How much ever you want
But don't forget the
Goodness in him-
போராட்டங்கள் போதும் என்று
முடிவு எடுத்து விட்டாயோ?
என்று எண்ணிய முட்டாள் நான்,
சவப்பெட்டியில் படுத்துக்கொண்டும்
போராடி சாதித்தவன் நீ!
உடன் பிறப்புகளுக்கு மரணித்தும் வெற்றியை தந்தவன் நீ!-
மீண்டும் உதிக்காத வண்ணம் , இன்று
ஏனோ மறைந்து விட்டது சூரியன் !
ஈராண்டு இடைவெளியில்
இருபெரும் தலைவர்களை
இழந்து இருளில் நிற்கிறது தமிழகம் !
இன்றோடு முடிந்தது ,
ஒரு தனி மனிதரின் பயணம் மட்டுமல்ல !
அரை நூற்றாண்டு கடந்த அரசியல் சகாப்தமும் தான் !
'அடுத்தது என்ன ?'
என்ற விடை தெரியாத கேள்வி
நம்மை சுழற்றி அடிக்கையில் தான்
பொட்டில் அடித்தாற் போல் புரிகிறது ,
இழந்தது ,
தலைவர்களை மட்டும் அல்ல ,
திராவிட இயக்கத்தைக் கட்டிக் காத்த
அசைக்க முடியாத அரண்களை என்று !
இனி நிலைத்து நிற்குமோ ,
அல்லது மெல்ல மறையத் தொடங்குமோ
இதுகாறும் திராவிடம் செலுத்திய ஆதிக்கம் !
காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !-