கசியும் மௌனம்
பேச்சற்று இருக்கும்
விழிமொழி..❤️-
உன் உள்ளத்தின்
விடைகளை
உன் விழி மொழிதலிலே
நான் அறியும் போது..
என் உணர்வுகள்
தொடுக்கும்
வினாக்களுக்கு
இங்கு வேலையில்லை?-
அன்று விழியில் காதல் மொழி பேச வைத்தான்...
இன்று பிரிவின் வலி அளித்து
கண்ணீர் மழை பொழியச் செய்கிறான்...-
நிலவாக நீயிருந்தால்
உனை தீண்டாமலே
மண்மீதமர்ந்து
என் விழி வழியாக
மோதல் செய்து
கவிதை வரிகளில்
காதல் சேர்த்து
நீ வரும் வரை
காத்திருப்பேன்......
-
தலைப்பில்லாத
கவிதையை ஏன்
எழுதினாய் என்றாய்
உன் விழிமொழியே
தலைப்பு என்றேன்-
உன்
மொழியின்
விழிகளில்
காதல்
கசிவதைப்
புரிந்திட்ட
என்
விழிகளின்
மொழிகளில்
நாணங்கள்
கசிகிறது!
NithuR 💞
-
உன் விழிச்சிறைக்கு
செல்லும் முன் சிறு
இளைப்பாறல் இமை
மூடி தரையை
நோக்கியது-
எனக்கு கவிதை
சொல்லத் தான்
வார்த்தைகள்
தேவைப்படும்!
காதலைச் சொல்ல
என் கண்களே
போதுமடா! கள்வா!-
நீ மறந்த மொழிகளை
என் விழியில் வைத்திருக்கிறேன்!
வாசிக்க நேர்ந்தால். .
மொழிபெயர்த்துக் கொள்!
-