-
இன்று ஞாயிறு தானே
வீட்டில் இருப்பவளுக்கு
எதற்காக பூ என்றேன்...
இன்று ஞாயிறு
என்பதை கூட உணராமல்
மலர் விற்க்கும் அந்த
மலருக்காக வாங்குவோம்
என்றான் என்னவன்...-
வாரறுந்த ஒருசில செருப்புகள்
உடன் குத்தாணியும் குண்டூசியும்
மேலிருந்து கீழான சட்டை பொத்தலுக்குள்
பட்டனைத் தேடியலையும் காற்றும்
நாற்பதைம்பது நாளில் விழுதுகள்
விட்ட நாடிமயிர்களோடு
புகழ்பெற்ற அத்துணிக்கடையின்
ஊரடங்கு நிறைவு திறப்புவிழாவிற்கு
காத்திருக்கும் அக்கிழவனை..
கண்டும் காணாமலும் சமூக இடைவெளி
கடைபிடிக்கிறது..
மனிதாபிமானமும் மனசாட்சியும்
முகமூடிக் கொண்டு...!!!-
வயிற்றின் வெறுமையில்,
வறுமை இட்ட பசியில்,
உனை எண்ணி ஏங்கினேன்....
நீ வருவாய் என !
உனை நம்பி, உணவே !
இப்படிக்கு
(வறுமையின் உரிமையாளன்)-
வானம்
வசப்பட வேண்டாம்
வறுமையில்
வயிற்றுக்கு
சிறு உணவு
வசப்பட்டாலே
வாழ்ந்திடுவார்கள்
உயிரோடாவது...
-க.கொ.மணிவேல்...🖋
-
அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது!!
கொடிது கொடிது கொரோனாவை
விட இந்த வறுமை கொடிது!!.-
வறுமை ஒழிந்துவிட்டது
பசி என்று அழக்கூட
இனி
அவ்வீட்டில்
ஒரு ஜீவனும்
இல்லை— % &-