முள்ளாக வாழும்
வரம் கிடைத்தாலும் போதும்
உந்தன் பார்வை வட்டத்தில்
கொஞ்சம் வாழ்ந்து வருவேன்...-
காற்றினில் கசிந்த
ஈரத்தில் கனிந்ததோ
இந்த மழை!
மழையினில் உதித்த
தண்மையில் பூத்ததோ
இந்த மலர்!
மலரினில் மலர்ந்த
பொலிவதில் தோன்றியதோ
இந்த மணம்!
மணம் கமழும்
மனமதில் ஊன்றியதோ
இந்த புன்னகை!-
புன்னகையால் வரைந்த
கவிதை ஒன்று
அவிழ்ந்து சொல்லுதே
என்னிடம்
நானும் மலர் தான் என்று!
'உன் இதழ்கள்'-
மொட்டவிழ்ந்த மலரின்
பூப்படைந்த சப்தத்தில்
படபடத்து வியர்த்துக்கொட்டிய
காதலின் நாணமிகு மோகத்தை
வர்ணிக்க வார்த்தைகள்
தேவையில்லை...!!!
-
அன்று ஒரு விடியலில்..!
என் மன வாசலில்..!
பூத்திருந்தது..!
அந்த வர்ண மலர்..!
நான் கடந்து வந்த..
பாதை எங்கும்...!
அந்த மலர் மணமே..
நிறைந்திருந்தது..!
நிலையற்ற சோகத்தில்,
இழக்க விரும்பவில்லை..!
என்னில் நிலை பெற்ற,
புன்னகை மலரை..!-
பனி படர்ந்த கன்னங்கள்!
தேகம் சொட்டும் பல வண்ணங்கள்!
தெவிட்டா மதுக் கிண்ணங்கள்!
தவிக்கும் என்னை ஈர்க்குதம்மா..
தேவை தீர கேட்குதம்மா..
நீ சுமக்க நான் பருக...
நாள் முழுக்க ருசி பார்க்க...
கமழும் வாசம் எனை அழைக்க...
கடைக்கண்ணால்
பார்த்துப் போனான்...
என் சக்களத்தான்
அவன் பட்டாம்பூச்சியோ?-