தோன்றிய வார்த்தைகளை
எல்லாம் வரிகளாய் அமைத்து
கவிதை மழலையை தவழ விட்டேன்
இத்தளத்தில் என் கவிதைகளையும்
கண் கொண்டு பார்த்து
கை கொண்டு தூக்கி
கொஞ்சி கொண்டாடிய என்
அனைத்து உறவுகளுக்கும்
என் மனமகிழ் நன்றிகள்
-
7 JUN 2021 AT 19:51
1 NOV 2019 AT 12:51
பேனைக்கு நன்றி
நினைப்பதை எண்ணங்களாக்கி!
எண்ணங்களை உணர்வுகளாக்கி!
உணர்வுகளை வரிகளாக்கி!
வரிகளை வலுவாக்கி!
வலிமையை அற்புதமாக்கி!
அற்புதங்களை தமிழாக்கி!
தமிழமுது படைக்க,
தன்னை கரைத்து!
தன்னை பிடிப்பவனை,
அடையாளம் காட்டும்!
பேனைக்கு
கோடான கோடி நன்றிகள்.
🙏🙏🙏🙏✒🙏🙏🙏🙏-
20 AUG 2021 AT 17:41
/அவர்/ நினைந்ததால் நிறைந்தது
ஒவ்வொரு வீட்டிலும் நெற்பானை
விவசாயி !.....பயிர்களின் இறைவன்
-
22 FEB 2020 AT 13:15
சட்டென உன் விழியில்
குடிபுகுந்த தூசிக்கு நன்றி
உரைக்கிறேன்..😘
மீட்புபணியை நான்
புரிய நேர்ந்தமைக்காக...🤩
...........................................................
காத்திருக்கிறேன்..மீண்டும்
ஒருமுறை நன்றி உரைக்க...!😜-