குல சாமிகளே
-
கைப்பிடி
சாதம் தானே என்று
வீணாக்கும் நம்மில்
எத்தனை பேருக்கு தெரியும்
பிடி சாதம் இன்றி
பசியில் மண்ணுக்கு
இறையாக மாறும்
மனிதர்களை பற்றி-
ஏமாற்ந்து விட்டு
ஏமாற்றி விட்டார்கள்
என்று நாம்
சொல்லுவதை விட
ஆகச்சிறந்த பொய்
இவ்வுலகில்
எதுவும் இல்லை-
பிள்ளைகளுக்கு
மதிப்பெண் எடுக்க கற்றுக்கொடுப்பதைவிட
மனிதத்தை
கற்றுக்கொடுங்கள்
எண்கள் கூட கைவிடலாம்
எண்ணங்கள் ஒருபோதும் கைவிடாது-
குழந்தைகளிடம்
ஒழுக்கத்தை
எதிர்பார்த்தால்
உங்களை போல்
முட்டாள் யாருமில்லை
குழந்தைகளை
ஒழுக்கம்மின்றி
வளர்த்தால்
உங்களை விட
முட்டாள் எவருமில்லை-
யாரையும் வார்த்தையால் காயப்படுத்தாதீர்
அதற்கான
மருந்தை
மருத்துவர்களால்
மட்டும்மல்ல
இதுவரை
கடவுளாளும்
கண்டுபிடிக்க
முடியவில்லை-
என்னோடு நீ
இல்லா நாட்கள்
நம் பிரிவை கவியில்
பிரசவிக்க நினைத்தேன்
அப்போது தான்
உணர்ந்தேன்
தமிழும் நானும்
ஒன்றென்று
இருவரும் தவிக்கிறோம்
தமிழோ சொல்லின்றி
நானோ நீ இன்றி
-
கோபமும் குப்பையும் ஒன்று
உடனுக்குடன் கொட்டி
தீர்த்து விடவேண்டும்
ஆகச்சிறந்த உண்மை தான்
அதை விட சிறந்தது
கொட்டும் போது யார் மீதும்
விழாமல் பார்த்து கொள்வது அது குப்பையாக இருந்தாலும் சரி
கோபமாக இருந்தாலும் சரி-
என் ஊர் திருவிழாவில் தான்
தெரிந்து கொண்டேன்
என் மனைவியும் ஆகச்சிறந்த
மருத்துவச்சி என்று
ரத்தமின்றி சத்தமின்றி
பிரசவம் பார்த்து விட்டால்
என் மணி பர்சிற்க்கு-