QUOTES ON #சொந்தங்கள்

#சொந்தங்கள் quotes

Trending | Latest
23 JAN 2021 AT 8:39

எங்களுக்குள் சண்டை வரும்
முறைத்துக் கொள்வோம்
முறுக்கிக் கொள்வோம் பிறகு
இணைத்துக் கொள்வோம்
இறுக்கிக் கொள்வோம்
எங்களில் யாரேனும் ஒருவருக்கு
வேறெவராலும் தீங்கொன்று
நேருமென்றால்
தீண்டுமுன்னே தீயாக மாறி
கொளுத்திடுவோம்....
கேட்க ஆளில்லை என்று நினைத்தாயோ
😎😎😎சொந்தம் டா😎😎😎

-


30 DEC 2020 AT 13:31

பாசங்களும், நேசங்களும் நிலைத்து இருக்கின்றன.. சொந்தங்கள் தான் தொலைந்தும், தொலைவாகவும் சென்று விடுகின்றன...

-


6 NOV 2019 AT 5:34

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, மாமன், மைத்துனன், அத்தை, மாமா, கொளுந்தியா, ஓரகத்தி, இன்னும் எத்தனையோ வார்த்தைகள் சொந்தங்களை அடையாளம் காட்ட.

ஆனால் இப்பொழுதெல்லாம் முப்பது வயதை தாண்டிய பெண்களை ஆன்டி என்றும் நாற்பது வயதை கடந்த ஆண்களை அங்கிள் என்றும் விளிப்பது வழக்கமாகிவிட்டது!

-


21 JAN 2021 AT 19:22

குப்பைத்தொட்டியில்
கோபுரக் கலசம்....
தேவை தீர்ந்தால்
கோபுரமும் அதன் வசம்....

-


20 NOV 2019 AT 10:31

காத்திருப்பின் நீளங்கள்
அதிகரித்த வண்ணமேயுள்ளன
காலங்களுக்கு ஏற்றவாறு
காத்திருப்புகள் மாறிக்கொண்டே!
சிதையுண்ட தேகத்தில்
சிலிர்க்கும் ரோமங்களில்லை,
வசைமொழி கேட்டு மடிந்த செவிகளில்
பக்ஷிகளின் இன்னிசை கேட்கவில்லை,
உடம்பை மறைக்க துணி உதவுவது போல,
மனதை மறைக்க ஏதேனும் உடுப்பு உண்டா...இப்புவியில்??
காரியவாதிகளின் சுயநல உலகில்
நம் லட்சியத்தை மறத்தல் தகுமா??

-


28 DEC 2021 AT 23:01

ஆடை கொடுக்க முன்வருவோரை
அம்மணமாய் மாற்றுவதும்...
பாதை கடக்க உடனிருப்போரை
தன் மனம்போல் ஆற்றுவதும்...
சுயநலவாதிகளுக்கு மட்டுமே
பொருந்தக்கூடிய
கை வந்த கலை !!!

-


25 NOV 2021 AT 11:38

ஊர்வலமாய் பறந்திடுவோம்
ஊன் வலிகள் மறந்திடுவோம்
உறவுகளை சூழ்ந்திடுவோம்
உணர்வுகளில் மூழ்கிடுவோம்
உன்னதமாய் வாழ்ந்திடுவோம்

-


21 OCT 2021 AT 11:12

சொந்தங்கள் சூழ்ந்திடும் சந்தர்ப்பங்கள்
இன்பங்கள் சேர்ந்திடுமே
பந்தங்கள் கூடிடும் கொண்டாட்டங்கள்
பந்தலில் பூக்கோலமே
💃💃💃💃💃

-


16 OCT 2021 AT 8:51

குணமறிந்து தரமுணர்ந்து நலம்பகிர்ந்து
நாலடிபிரிந்து நகர்ந்து உழல
வரவறிந்து செலவுணர்ந்து இடுக்கண்பகிர்ந்து
ஒட்டியும் வெட்டியும் உழலு முறவு

-



சொந்தங்களிடமிருந்து
அலைபேசி ஒளிப்பதே,
அவர்களின்
சொந்தப் பிரச்சினையைத்
தீர்ப்பதற்கே தவிர!!..
நம்மிடம் அக்கறை
மிகுந்து நாம் சொல்லும்
பாசத்தை கேட்பதற்கல்ல!!!...

-