அழைத்தால்
அரை நொடியில்
வந்து நின்முன்
நிற்பானவன்!
திருநீரான்!
வர தாமதித்கும்
போதே புரிந்திடு
மனமே! கழித்தே
தீரவேண்டிய
கர்மவினை
இஃதென்று!-
நச்சுப்பல்லாக நானிருந்து
சதிகள் செய்து கொண்டியிருக்கும்
சதிகாரிகளை தீண்டிடுவேன்...💕-
விதைபோட்டு அறுவடைக்காக காத்திருக்கும் காலம்போல் தான்...
வினை செய்து வினை அறுப்பவனின் வினாடிகளும் எண்ணப்படுகின்றன...
வி(தை)னை முற்றிய பிறகே கிடைக்கிறது ...
அந்த விதை(னை)க்கான விடை..
-
எல்லாம் முடிந்தது என்று நினைக்கும் போது ,
தொடங்குவதே கர்மவினை !-
ஒரு கோடு அளவு தான் பாவம் ,
ரோடு போடும் அளவிற்கு கர்மவினை வச்சு செய்கிறது !-
விதைத்தவை விளைச்சலாக இருக்கிறது ,
அருவடை மட்டும் வினைகளை பொறுத்து !-
1.08.2021 ஞாயிறு:
பெரிய வலையில்
சிக்காத மீனும்
சிரிய தூண்டில்
சிக்கிக்கொள்ளும்
மனிதனின் தவறின்
கூற்றும் இது போல
தான் தவறுகளிலிருந்து
தப்பித்துக்கொண்டே
இருந்தாலும் ஒரு சிரிய
பிழையில் சிக்கிக்கொள்வான்.!
"கர்மவினைகள்"-
செய்த
வினையெல்லாம்
முடிவதில்லை ,
உனக்கு விடை
கிடைக்கும் வரை !-