நீண்ட நேர விவாதத்திற்கு
பின்பு முடிவுரை எழுதுகிறது
உன் பிடிவாதம் தான் வென்று
விட்டதாய்...
அதை மௌனமாய் வேடிக்கை
பார்க்கிறது...
தன் வாதத்திற்கு முன்னுரையை
கூட தொடங்காத என் தரப்பு
நியாயங்கள்...!-
இப்போதெல்லாம்
அந்த பிடிவாதக்காரியிடம்
எந்த பிடிவாதமும் இல்லை...
" நீ வேண்டும் " என்பதை தவிர...!-
நீ கோவப்படும் போது
பொறுத்து...
நீ சிரிக்கும் போது
சிரித்து...
நீ இழுக்கும் போது
வளைந்து...
எல்லாவற்றையும்
விடுத்து...
உன்னை மட்டும்
பிடித்தவளாகி போனாள்
அந்த பிடிவாதக்காரி...!-
சண்டைக்கு பின்
கோபங்களையும்
பிடிவாதங்களையும்
விட்டு விட்டு முதலில்
நாமே பேசிட
துவங்குவது...
பேரன்பின்
வெளிப்பாடேயன்றி
அது சுயமரியாதையின்
தோல்வியல்ல...!!!-
நெடுந்தொலைவு பயணத்தில்
நெடுஞ்சாலை பாதையில்
திடீரென ஏற்படும் விரிசல்களை
அவ்வபோது குதித்து கடக்கிறேன்
அனேக பொழுதில் காயப்பட்டும்
வீழ்கிறேன்..
உயரத்தையோ தூரத்தையோ
கண்டு மலைக்கவில்லை
தாங்கிக்கொண்டிருக்கும் பிடி
தளர்ந்துவிடுமோ என்ற தயக்கம்
மட்டும் முன்னொரு அடியெடுக்க
நடுங்குகிறது...
முடியுமென்ற பிடிவாதம்
இலக்கினை நேராக நிறுத்துகிறது...!!!-
தூண்டிலில் சிக்கிய மீனென
துடிதுடிக்க விடும்...
அவன் பிடிவாத மௌனங்கள்
வார்த்தைகளற்ற வன்முறை...!-
பிடிக்கும்
பிடிக்காது என்பதல்ல
பிடிவாதம்
மட்டுமே எப்போதும்
உன்னிடம்
செல்லுபடியாகும் காதலே..❤️-
ஆசைகள் பெரும்பாலும் எடுபடுவதில்லை
பிடிவாதங்களே அதை செயல்படுத்துகிறது-
பிடிவாதங்கள் பிடித்தவருடன்
மட்டும் செல்லுபடியாவது போல
பிடிக்கவில்லை என்பதை கூட
பிடிவாதம் பிடித்து தான் சொல்ல
வேண்டி இருக்கு..❤️-