நான் செல்லும்
இப்பயணத்தின்
வழியெங்கும்
நீயிருக்கிறாயென்ற
ஓரே பிடிப்பில்தான்
இன்னுமுன்
நினைவு(நிழல்)களுடன்
பயணித்து
கொண்டிருக்கிறேன்..😌
#கிறுக்கா..♥
-
ஒரு சிலருக்காக...
நாம் பலரை மற(று)க்க நினைப்பது சரியா..?
#அடிமுட்டாள்தனமது..🤦♀️
அவ்வொரு சிலரைப்
பெறுவதற்கு நமக்குத் தகுதியுண்டு...
ஆனால் அப்பலரை..?
நாம் நம்மிடமிருந்து
விலக்குவதற்கான தகுதி நமக்கில்லை..😌
இதையுணர்ந்து நகர்தல் வேண்டும்...
இல்லையேல்...
நிஜத்தில் வெறும் நிழலாயும்
நடைப்பிணமாயும் மட்டுமே வாழ நேரிடும்..🙃
#கிறுக்கா..💔-
நிலவின் ஒளியில்
காதல் நினைவலைகளில்
நீந்தி கொண்டிருக்கிறேன்...-
எனையுரசும்
சூரை காற்றாய்
நீ இருக்க...
புயல் காற்றிற்கு
பின் வரும் அமைதியான
தென்றலை போல்
நான் இருப்பேன்...-
நீதானென நான் நினைக்கிறேன்...
நிராகரிப்புத் தானே யென நீ நினைக்கிறாய்...
இரண்டிற்குமென்ன
பெரிய வித்தியாசமிருந்துவிடப் போகிறது சொல்..?!
உனக்கு நானுமுன் நிராகரிப்பும் ஒன்றுதானே...
#கிறுக்கா..😌-
உனக்(கென)கு
மட்டும்
நான்
முட்டாளாய்
வாழ்ந்து
கழி(ளி)க்கிறேன்..😌
#கிறுக்கா..♥
#லாவண்யா_துரைசிங்கம்..🙂-
அவளுக்காய்
நீ கொடுத்த
அக்காதலினை
இன்று என்னிடம்
வந்து பேசுகிறாய்!...
ஆனால்
உனக்காய்
நான் கொடுத்த
இப்பேரன்பினை
யார் பேசுவார்?...
உன்னிடம்¿¡..💔
#கிறுக்கா..😌-