प्रेम❣️
जिसकी सम्पूर्णता के लिए,
किसी वजह की जरूरत नहीं होती!
इश्क 💔
एक मीठा जहर!-
முதன் முதலாய்
மார்பில் முகம்
பதிக்கிறாள் அவள்...
சாய்ந்தும் காய்ந்தும்போன
பாலைவன இதயமெங்கும்
சிரபுஞ்சி மழையாகி
பொழிகிறது...
காதல் மழை
-
உன்னைப் பற்றி
எதை நினைத்தாலும்
எழுதினாலும்
கவிதையாகிறது என்கிறேன்...
உலகம் ஆமோதிக்கிறது...
கூடவே ஆராதிக்கிறது.....-
நீ உண்ணும் உணவில்
சிறு பருக்கையேனும்
எனக்கு ஊட்டிவிடு
என்கிறாள்
சின்ன சின்ன சிரிப்போடு....
கணவன்
காதலனாகி
தோழனாகி பின்னர்
அன்னையாகிறான்.....
-
செந்தமிழ் சொல்லெடுத்து
எளிமையான வரிகளால்
மனைவிக்கு கட்டிய
பிரம்மாண்ட
கவிதைத் தாஜ்மஹால்
"அவள் பெயர் ஐஸ்வர்யா"-
வானெங்கும் மின்னல்
ஊரெல்லாம் மழை
வீதியெங்கும் மண்வாசம்
வீடெங்கும் சாரல்...
ஒருவேளை
இவையெல்லாம்
அவள் மழையில்
நனைவதாளோ என்னவோ???-
அவள்
காட்டன் சுடிதாரின்
துப்பட்டாவை
காற்றோடு கலந்து செல்கிறாள்...
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணச் சிறகுகள்
கர்வம் கலைந்து
காற்றோடு காணாமல் போகின்றன....
-
காலையில் கொடுத்த
காபியில்
சக்கரை இல்லை
கசக்கிறது என்றேன்....
கைவிரல் நனைத்து
சிறிது சிரித்து
இப்போது குடி என்கிறாய்...
காபி இனிக்கிறது...-
விடிந்ததும்
விழித்திடும்
உன் நினைவுகளுக்குத்
தெரிவதில்லை
கனவிலும்
நீதானென்று...
-
தன்னை தானே
பேரழகி என்று
வர்ணித்துக் கொள்(ல்)கிறாள்.....
வர்ணிக்காவிட்டாலும்
அவள்
அப்படித்தானோ என்னவோ...-