நீ மெது மெதுவாய்
உன் இதழ் பதித்து
பீங்கான் கோப்பையில்
தேநீர் அருந்துகிறாய்
தேநீர்
ஆனந்த தாண்டவத்தில்
தானாகவே
தொண்டைக்குழிக்குள்
தட்டுத் தடுமாறி
தற்கொலை
செய்துகொள்கிறது
-
ஒருவர் இளநீர்
கொண்டுவருகிறார்
இன்னொருவர் மாங்காய்
கொண்டு வருகிறார்
பக்கத்து வீட்டு சித்தி
வெள்ளை சுரைக்காயோடு வருகிறார்
காட்டில் குடியிருப்பவர்
கோழிக்கறியோடு வருகிறார்
தேங்காய் பண்ணோடு
அப்பா வருகிறார்
பரோட்டா, சிக்கன் பிரியாணியோடு
அண்ணன் வருகிறார்
எல்லோரும் உனக்கு ஏதேதோ
கொண்டுவரகிறார்கள்
நான் மட்டும் தனியே
என்ன கொண்டுவர என்கிறேன்
நீ மட்டும்
என்கிறாய்
இளையராஜாவின் இசையில்
இதயம் நனைக்கிறது
-
உன்னையை
பற்றி வருணித்து
விடிவதற்குள்
பக்கம் பக்கமாய்
ஆயிரம் ஆயிரம் கவிதைகள்
எழுதி முடித்துவிடவதாய்
உத்தேசம்
இங்கே
சொற்களுக்குத்தான்
சோழியாட்டம்
உன்னை வருணிக்க
தமிழ் சொற்கள்
சற்றே நேரமாவது
வரிசையில் நிற்கட்டுமே!!!
என்ன அவசரமாம்
இவைகளுக்கு???
-
நான் பிறந்த மாதமாம்
நவம்பரில் தொடங்கி
அவள் பிறந்த மாதமாம்
ஜூன் கடந்து
உனக்கென நீயே
தேர்ந்தெடுத்து
கொண்டாயடா
ஜூலை 30 என...
-
நீ பிறந்த 24 மணி
நேரத்தில்
முதன் முறையாக
பசியோடும் பாவத்தோடும்
நீ அழுது கொண்டுதான்
இருந்தாய்
பாவம்
அங்கே இருக்கும்
மருத்துவ செவிலியர்களுக்கு
மட்டும்
அது கேட்கவே இல்லை....-
நீ அழுதுகொண்டே
பிறந்த
அந்த நொடியில்தான்
நான்
அப்பாவாக
அவதரிக்கிறேன்
அவள்
அன்னையாக
அரியணை ஏறுகிறாள்
நீ
அரசனாக
ஆலப்போகிறாய்
அழுகை
சிறுது நேரம்
ஆனந்த கூத்தாடட்டும்
-
அது ஒரு
கொடிய கொரனா காலம்
ஏழாம் மாதத்தில்
நடக்க வேண்டிய வளைகாப்பு
ஒன்பதாம் மாதம்வரை
நகர்ந்து சென்றது
கொரனாவின்
கோர அலைகளுக்குள்
யாரும் சிக்காமல்
இறைவனுக்கு நன்றி
-
மாதுளையில்
கண் விழித்து
மாங்கனியில்
பசியாரி
கொண்டை கடலையில்
சுவை தீர்த்து
பசும்பாலில்
சோடா கலந்து
பருவகாலம்
பல தாண்டியும்
பத்தியம் பலவாய்
அவள் இருந்ததினால்
பத்திரமாய் நீயும்
பிறப்பாயாடா, பிறந்தாயாடா
-
நம் இருவருக்கும்
இடைப்பட்ட
எல்லைகளுக்குள் தான்
காதல்மழை, புயலென
சிறுது காலம் வாழ்ந்து
கொண்டிருந்தது என்றிருந்தேன்
இப்போதெல்லாம்
பலத்த இடியுடன் கூடிய
மழையாக, புயலாக
அவன் பின்னே
காதல்மழை
கடந்து செல்கிறது
மகனாய்
அவன்
பிறக்கும் வரை
-
இருக்கை இடுக்கினில்
கைகளினால் ஒரு
தொட்டில் கட்டி
இதயத்தின் அருகினில்
அன்பினால் அரவணைத்து
அன்னை பாடிடும்
ஆனந்த யாழ் இதுவோ
ஆவாரம் பூ மழை இதுவோ
ஆரவாரம் சூடிடும் பொழுது இதுவோ
-