மழைக்காற்றும் தேநீரும்
முயற்சித்தும் மனதில்
நிறைந்து தளும்பிய
சாய்வுநாற்காலியை
துளைத்த விழிகளை
அகற்ற முடியாமல்
அவரின் மூக்குக்கண்ணாடியை
சற்றே உரசிச்செல்கிறது...!!!-
பாட்டியை கோவிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கும் தாத்தாவை கண்டு உணர்ந்தேன் உண்மை காதல் காலத்தால் மாறாது என்று....
-
தாரமிழந்து அடுப்படியில் தனியே
தட்டுப்புட்டு சமான்களை உருட்டும்
எண்பது வயது தாண்டிய கிழவன்..
கிழவன் பெற்ற ஒற்றை மகனோ..
ஒரே ஊர்
ஒரே தெரு
ஒரே வீடும்கூட தான்
வாசல் வேறு..
செறுமிக்கொண்டும் தடுமாறிக்கொண்டும்
இருக்கும் கிழவன் வியாதி தொற்றி
படுக்கை ஏறினாலும் விசாரிக்கவரும்
சுற்றங்களுக்கிடையில் மட்டும்
ஒரு வாய் தண்ணீர்கூட மோந்து
தராத மருமகள் வெரசா வந்து ஒட்டிக்கொள்கிறாள்..
பாட்டனுக்கு வாங்கி வந்த பழங்கள்
திண்ப்பண்டங்கள் கடத்தி செல்ல..
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
கதை கேட்டுப் பாருங்கள்..!
ஒரு முப்பது நாற்பது
ஆண்டுகள் முன்னென...
நம் தாத்தா பாட்டிகளிடம்..!
இறுக்கமான இருதயக்கூடு
இலகுவாக மாறிடக் கூடும்..!
💓💛💚💙💜❤💜💙💚💛💓-
குச்சனூரு போயி வந்தோம்..!!
பதிவிற்கு👇👇👇👇
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
வாழ்க்கை
உன்னுடன் வாழ்ந்த
கிராமத்து
வாசனை நிரம்பிய
பட்டைச் சோறு
தாத்தா..!!-
தாத்தா தந்த பத்துரூபாய்
கானாத பிள்ளைய கண்டேன
ராசா கண்ணீரும் சிந்தாம நின்றேனே
கிழிஞ்சாலும் நெகிழித்தாள் சேமிக்கும்
காசு பத்தையும் உன்கிட்ட தந்தேனே
என் பிள்ளைக்கோர் பிள்ளையாய் வந்தானே மகராசன் பேரப்பிள்ளைனு பெயரும் கொண்டானே!-