தெரியாத விடயத்தை பேசுகிறாய் என்று கூறுவதை விட புரியாத விடயத்தை பேசுகிறாய் என்று கூறுவதே கூட சரியாத விடயத்தை பேசுகிறாய் சரிந்து விடும் என்று விரிசல் விடுமென கூறுகிறாய் பிரிந்து விடுமென்று பதருகிறாயா தெரியாத விடயத்தில் உள்ளே வராதே புரியாமல் ஏதேனும் உளரிக் கொட்டாதே பிரியாது விரியாது சரியாது மாறாது...
கணக்கின்றி கதைத்த நாட்கள் கணக்கற்று கடந்த நேரம் கணக்கில் கொள்ளவில்லை... இப்பொழுதோ கண நேரம் பேசி கணக்கில் வைக்கிறாய் நேரத்தை கனக்கிறது கல் மனம் களவாடிய பொழுதுகளைத் தேடி...
நினைக்காத நேரங்களில் நிறைவேறும் ஆசை நினைக்காத அளவு நிறையும் மகிழ்வும் நிலைத்து நீடிக்குமா நிறைந்தே இருக்குமாயென நினைத்து சந்தேகம் வந்தது நித்திரை கலைந்தது...