தெளிவான சிற்றோடையின் நடுவே கிடந்து திடீரென வான் பார்க்கக் குப்புறக்கத் திரும்பிவிட்ட கூழாங்கல்லின் நடுவில் பச்சையாய் இருக்கிறது என் முகம்!
சில குட்டி மீன்கள் கண்வரை முத்தமிட்டுப் பார்த்துக் கன்னம்தான் பிடித்திருப்பதாகத் தின்று கிளம்பியதால் அந்தப் பச்சையப் படத்தில் எனக்குக் கன்னங்கள் இல்லை!
நெற்றியின் நடுவே இயற்கை இட்ட முத்தமாய் அந்தக் கல்லின் இயல்புத் தேமல்!
கொஞ்சம் கீழே… உங்கள் உதடுகளைக் குறிவைக்கும் என் கோணல் மூக்கின் அடிவாரத்தில் பிரகாசமாய்ப் படந்திருக்கிறது வான் பார்க்க நான் மீண்ட புன்னகையின் அகண்ட காவிரி!!
Love to write ! And Write your love ! Either you can Become a writer Or else You can become A lover ! But write always And Write your heart ! Because, None can see your Heart and love you But Everybody can see Your writings !
பிழைத்திருந்தது காதல், சுற்றிய அர்த்தமற்ற பயணங்களில் சுகித்திருந்தது நட்பு, அர்த்தம் கண்டறிய பார்த்தேன்... முதலில் விலகியது நட்பு என்னை முட்டாள் என்றது காதலுமே
சேர்ந்தெழுதிய கவிதைகள், ஊர் சுற்றிய இனிமைகள், அள்ளித் தின்ற வாசங்கள், அணைத்துக் கொண்ட பாசங்கள், தட்டிக் கொடுத்த திருப்பங்கள், கிட்ட இருந்த சறுக்கல்கள், பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், பார்த்து சலித்த சினிமாக்கள் நண்பா, நீ அருகிருந்தும் தூரம் உணரும் நெடுங்காலமாய் உன் நினைவுகள்..