நம்ம கூட
பேசனும்னு நினைக்குற
யாருமே போன்
பண்ணா எடுக்காம
இருக்க மாட்டாங்க !!!-
தமிழ் காதலி
கொஞ்சம் கோபம்
நிறைய குறும்பு
நான் அதுபோலவும் இல்லை
இதுபோலவும் இல்லை
எனக்கு பிடித்தது
போல் இருக்கிறேன்
எனக்கு பிடித்ததை
செய்கிறேன்.....
மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.....-
கூவம் ஓரமாய்
ஓட்டை குடிசையும்
உடைந்த கதவும்
விறகில்லாத அடுப்பும்
பரட்டை தலையும்
ஒட்டிய வயிறும்
நலிந்த உடலும்
சிரிப்பில்லாத முகமும்
செருப்பில்லாத காலும்
சொல்லியது
அந்த தாத்தாவின்
ஏழ்மையின் அவலத்தை.......-
நான் குடியிருக்கும்
ஓட்டை குடிசைக்கு
வாடகை கேட்கிறார்கள்....
ஆனால்
என் வீட்டில்
அடுப்படியில்
குடியிருக்கும்
பூனையிடம் நான்
என்ன பணமா கேட்கிறேன்?????
-
நீ இல்லாத
இடம் வெறுமையாக
காட்சி அளிக்கிறது.........
எதைக் கொண்டு
அந்த வெறுமையை
விரட்டுவது ???????
இயற்கை அழகா ????
புத்தகங்களா ????
இசையா ???
எல்லா முயற்சியிலும்
தோற்றுப் போய்
முடிவுக்கு வந்தேன்....
உன்னை
நினைப்பது
என்று !!!!!!!-
தினசரி நாளிதழும்
காலண்டர் காகிதமும்
காட்டும் முன்
என் கவிதைகள்
காட்ட வேண்டும்
என் வாழ்த்துக்களை !!!
நீ விழித்திருக்கும்
வேளையிலும் உன்
நினைவில் வருவேனே
என் வாழ்த்தை
சொல்வேனே !!!!
எத்தனையோ பொழுதுகள்
அலாரத்திலும்
சூரிய உதயத்திலும்
விடிந்தாலும் !!!
இன்றைய பொழுது
என் வாழ்த்துக்களால்
விடியட்டும் !!!-
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே-
காதலித்த உன்னோடு
சேர முடியாமல்
போனாலும்
உன்னை காதலித்தது
காதலித்தது தான்
அது நான்
இருந்தாலும்
இறந்தாலும்
என்றும் மாறாது...-
அன்று முகநூலில்
சந்தித்த
அதே அவன்தான்
நடை உடையில்
மாற்றம்
அதே அழகு
இப்போது
அதைவிட பேரழகு
எங்களிடம் இன்றும்
அதே காதல் இருக்கிறது
ஆனால்
அவன் மனைவியோடு
இருக்கிறான்
நான்
என் காதலோடு
இருக்கிறேன்
என்னை ஏமாற்றியது
காதலும் அல்ல
காலமும் அல்ல
நான் எனும்
அகந்தை தான் !!!!!-