விமல் குமார் முத்துமாரி   (Theera vimalkumar)
52 Followers · 51 Following

read more
Joined 30 November 2018


read more
Joined 30 November 2018

அவ்வப்போது கூடல் கொண்டு...
எப்போதும் காதல் கொண்டு...
எப்போதாவது கோபம் கொண்டு...
சந்திக்கும் காலம் சிலநேரம் என்றாலும்...
மறக்காத வண்ணம் உன் நினைவை மனதில் தந்தாய்...
இப்பொழுது மட்டும் அல்ல என்னவளே...
முப்பொழுதும் உன்னை பற்றிய கற்பனைகளை...

-



யாரடி நீ 💚....
உயிரூட்ட பட்ட ஒவியமோ....
காதல் கவிதைகள் நிறைந்த காவியமோ....
குழந்தை தனம் மாற குமரியும் இவளோ....
என் மனதினில் நீங்காத மங்கையும் அவளோ....
கண்ணாடி என்னை அல்லாது அவளை காட்டிட.....
உணர்தேன் அப்போதே என் மனதினுள் நுழைந்த அவள் உயிரினில் கலந்திட்டால் என்று.....
என் இதயத்தில் கனக்கும் இம்சையாய் அவள் இருந்தும் இதமாகவே உணர்கிறேன்......

-



If u make and fullfill others happiness🥰 - Definitely oneday God makes ur happiness 🤗

-



தொலை தூர காதல்❤.....
அருகில் அவள் இல்லாத போதும் அடிக்கடி பேசி கொள்கிறேன் அவள் நினைவுகளுடன்....
அவள் நினைவலைகளில் நித்தமும்
முழ்கியே என்னையே மறக்கிறேன்.....
அவ்வப்போது அலைபேசியில் ஊடல் கொண்டும்.....
எப்போதாவது பார்க்கும் காணொளி அழைப்பும்
சேர்ந்து அவள் மேல் காதலை கூட்டிட.....
அவளுக்கான ஆயிரம் முத்தங்களை
என் அலைபேசி அள்ளி கொள்ள.......
காத்திருப்பது கூட சுகமான சுமைதான்
உனை காணும் நாளை எண்ணி.......

-



மாறா காதல்♥
தினம் தினம் எதையோ தேடி அலையும் புதுமை அவள்.....
அன்று ஒர் கதையை தேடலானாள்.....
ஒர் சிப்பாயின் தேடலாய் நீள்கிறது கதை.....
கதையின் நாயகன் விந்தைகள் பல நிறைந்த
விசித்திரமான மனிதன் அவன்.....
இவளின் தேடல் கதையை தாண்டி, அவன் மேல் காதல் கொள்ள.....
கதையோடு சேர்த்து கள்வன் அவனையும் தேடலானாள்......
இப்படியும் இருக்க முடியுமா? என ஈர் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் "மாறா"காதலுடன் ஒர் கிழவன்......
அவன் 50 வருட தேடலின் முடிவாய் காண்கிறான்
அந்த மீனை(அவன் மீனாட்சி)......
அவளின் காதலும் அற்பமல்ல என்பதை போல் திருமணமே காணாமல் அவளும் இவனுக்காக......
இருவரையும் சேர்த்து வைத்தது, அவர்களின்
"மாறா" காதல் தானே......


-



கல்லூரி காதல்(சாலை) ....
முதன்முதலில் அவளின் விழி பார்த்து....
அவள் வரும் வழி எல்லாம் எனை சேர்த்து....
அவள் கடைவிழி பார்வை என்னுள் காதலாய் கசிந்து...
தினம் தினம் என்னையே எனக்கு புதிதாய் காட்டினாள்....
தள்ளி தள்ளி நின்று தயங்கி தயங்கி பார்த்து....
அவள் இதழில் இருந்து வரும் இம்மியளவு புன்னகைக்கும், கண் பேசும் காதலுக்கும் என் தூக்கம் தொலைத்து....
முதலில் கண்களால் பல கதைகள் பேசி....
கண்களால் பேசிய காதலை அவள் என்னிடம் வார்த்தைகளால் கூற....
நான் உள்ளுக்குள் மகிழ்ந்து, வெட்கத்தால் நெளிந்து விருப்பத்துடன் அவள் காதலை ஏற்று.....
முதன்முதலாய் அவள் விரல் என்னுள் வெப்பம் பரவிட, அதை நான் விழிகளால் வெளிகாட்டிட.....
காலங்கள் கடந்து அவள் கரம் பிடித்து மணம் முடித்து....
வருடங்கள் பல ஆனாலும், என்னுள் மாறாது அவள் மீதான காதல்.....

-



திட்ட வரும் வார்த்தைகளும் திணறி போகின...
அடக்க வரும் வார்த்தைகளும் அற்பமாகின...
என்னவள் கெஞ்சிடும் பாணியில் "மாமா" என்று கொஞ்சிட சுவடுகள் இன்றி மறைந்து போகின
அவள் செய்திட்ட குறும்புகள்...

-



என்னை சுமப்பதில் சுகம் கண்டாய்.....
உன்னை மாய்த்து என்னை பெற்றாய்.....
தனியாய் மரணம் வென்று மறு ஜணணம் எய்தாய்.....
என் அழுகையிலேயே அதன் அர்த்தங்களை உணர்ந்தவள்....
இப்போதும் என் மௌனங்களிலும் அர்த்தம் உணர்கிறாள்.....
அன்னையாய் வாழ்வை அர்பணித்த என் தாயுமானவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "அம்மா "

-



தன்னம்பிக்கை கொண்ட தலைமகன்.....
தன்னிகரில்லா தமிழ்மகன்.....
அமராவதியாய் அறிமுகமாகி அமர்களமாய் விமர்சனங்களை தாண்டி பல வேடமிட்டு...
தொழிலாளர் தினத்தில் பிறந்து
கடும் உழைப்பாளியாய் வளர்ந்து...
இன்று பல கோடி மக்கள் மனங்களில்
முதலாளியாய் முடிசூடா மன்னனாய் ....
என்றும் ரசிகர்களுக்கு "விஸ்வாசம்" ஆகவும் .....
நாளை மன"வலிமை "யோடு வெற்றி பெற காத்திருக்கும் தல அஜித் குமார்
அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

-



நின் நியாபகத்தின் போதெல்லாம் கதைக்கதையாய் கதைத்திடவும் .....
காரணமே இல்லாமல் முத்தமிட்டிடவும்.....
சண்டையின் போதெல்லாம் திட்டிடவும்.....
சமாதானத்தின் போதெல்லாம் கொஞ்சிடவும்.....
அடிக்கடி என் அரவணைப்பில் அவதிப்படவும்.....
நான் நிசப்தமாய் நித்திரை கொள்ளும் அவள் மடியினை நித்தமும் நியாபக படுத்துகிறது
அவள் தந்த தலையணை😘.....

-


Fetching விமல் குமார் முத்துமாரி Quotes